திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு துவங்கியது. 21.47 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவை தொகுதிகளிலும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கத் தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் ஆணையம் செய்துள்ளனர்.
இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
திருச்சி மாவட்டத்திலுள்ள 9 தொகுதிகளுக்கும் சேர்த்து சுமார் 3,500-க்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகள் சுழற்சி முறையில் சரிபார்க்கப்பட்டு அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய மாவட்டம் முழுவதும் சுமார் 4,500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
111 பதற்றமான வாக்குச்சாவடிகளில், துணை ராணுவப் படையினர் நேரடியாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.
2,775 வாக்குச்சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து நுண்பார்வையாளர்கள் நேரடியாகக் கண்காணிப்பார்கள்.
திருச்சி மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக ஆண்களை விட 64,941 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.
இதுவரை 20,39,698 பேருக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. இல்லாதவர்கள் வாக்குச்சாவடி மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்காக சரிவுப் பாதை (Ramp) மற்றும் வீல் சேர் வசதி தயார் நிலையில் உள்ளது. வெயிலின் தாக்கத்தைக் குறைக்க வாக்குச்சாவடிகளில் பந்தல் மற்றும் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டத்தின் ஒட்டுமொத்த
மொத்த ஆண் வாக்காளர்கள்: 10,40,900
மொத்த பெண் வாக்காளர்கள்: 11,05,841
மூன்றாம் பாலினத்தவர்: 310
திருச்சி மாவட்ட மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 21,47,051 ஆக உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
மணப்பாறை
ஸ்ரீரங்கம்
திருச்சிராப்பள்ளி (மேற்கு)
திருச்சிராப்பள்ளி (கிழக்கு)
திருவெறும்பூர்
இலால்குடி
மண்ணச்சநல்லூர்,முசிறி
துறையூர் (தனி)
இந்த 9 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 3,341 கட்டுப்பாட்டு கருவிகள் , 5,621 வாக்குப்பதிவு கருவிகள் ) மற்றும் 3,619 விவிபேட் கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளன.
குறிப்பாக.. வாக்களிக்கச் செல்லும் போது வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அங்கீகரித்த 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்லுமாறு மாவட்ட தேர்தல் அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
Summary
People are eagerly voting as polling has begun in Trichy.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவாரூா் மாவட்டத்தில் 1,271 வாக்குச்சாவடிகள்

நெல்லை மாவட்டத்தில் இன்று வாக்குப்பதிவு; களத்தில் 90 வேட்பாளா்கள்

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு
திருச்சியில் ரூ. 4.57 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை



