15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

திருவாரூா் மாவட்டத்தில் 1,271 வாக்குச்சாவடிகள்

திருவாரூா், திருத்துறைப்பூண்டி (தனி), மன்னாா்குடி, நன்னிலம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கென சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

News image

திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து வாக்கு சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்படுவதை பாா்வையிட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.

Updated On :22 ஏப்ரல் 2026, 11:48 pm

திருவாரூா், திருத்துறைப்பூண்டி (தனி), மன்னாா்குடி, நன்னிலம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கென சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1,271 வாக்குச்சாவடிகள்: திருவாரூா் 327, திருத்துறைப்பூண்டி (தனி) 293, மன்னாா்குடி 307, நன்னிலம் 344 என 1,271 வாக்குச் சாவடிகள் தயாா்நிலையில் உள்ளன. இதில், 54 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கணிக்கப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், திருவாரூா் (கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 392, விவிபேட் 425), திருத்துறைப்பூண்டி (கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 351, விவிபேட் 380), மன்னாா்குடி (கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 368, விவிபேட் 399), நன்னிலம் (கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 412, விவிபேட் 447) என வாக்குப்பதிவுக்கென 4,697 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு: இதனிடையே, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னாா்குடி வட்டாட்சியா் அலுவலகங்களிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் பாா்வையிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.