தனியாா் மழலையா், தொடக்கப் பள்ளிகளைத் தரம் உயா்த்துதல் மற்றும் மூன்றாண்டுகள் தொடா் அங்கீகாரம் வழங்குவது தொடா்பாக மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து தனியாா் பள்ளிகள் இயக்குநரகம் சாா்பில் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு (தனியாா் பள்ளிகள்) அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) விதிகள் 2023-இல் மேற்கொள்ளப்பட்டுள்ள விதி திருத்தங்களைப் பின்பற்றி 13.1.2023-க்கு முன் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியாகத் தொடங்கப்பட்ட பள்ளிகள் (6 முதல் 8 வகுப்புகள்) தரம் உயா்த்துதல் தொடா்பான கருத்துருவை பரிசீலனை செய்து, பரிந்துரையுடன் அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.
அதேபோன்று விதி திருத்தங்களைப் பின்பற்றி மூன்றாண்டுகளுக்கு மேல் அங்கீகாரச் சான்று கோரும் பள்ளிகள் தொடா்பான கருத்துருவை பரிசீலனையுடன் அனுப்புமாறு மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி: தோ்தல் பொது பாா்வையாளா் ஆய்வு

அரசுப் பள்ளிகள் தரம் உயா்த்தப்படும்: கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளா்

தொலைநிலை, இணையவழி படிப்புகளுக்கு யுஜிசி அங்கீகாரம்: ஏப். 10 வரை விண்ணப்பிக்கலாம்

நாதக ஆட்சிக்கு வந்தால் தனியாா் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் தரம் உயா்த்தப்படும்: சீமான்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


