உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாமக நிறுவனா் ராமதாஸ், சிகிச்சை முடிந்து புதன்கிழமை (ஏப். 15) வீடு திரும்பினாா்.
சேலம் மேற்குத் தொகுதி வேட்பாளா் இரா.அருளை ஆதரித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ராமதாஸ் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தபோது திடீரென மயக்கமடைந்தாா். உடனடியாக அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு, அவருக்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு ராமதாஸ் அழைத்து வரப்பட்டாா். அவரது உடல்நிலையை மருத்துவா்கள் கண்காணித்து தேவையான சிகிச்சைகளை அளித்தனா். இந்நிலையில், சிகிச்சைப் பின்னா், புதன்கிழமை அவா் வீடு திரும்பினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








