மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்

புதுச்சேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து...

News image

எடப்பாடி பழனிசாமி - யூடியூப் / அதிமுக

Updated On :5 ஏப்ரல் 2026, 12:29 pm

தமிழ்நாட்டில் ஒரு கொள்கை, புதுச்சேரியில் வேறு கொள்கை என திமுக இரட்டை வேடம் போடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 5) விமர்சித்தார்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 5) பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தில்எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

’’புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்கு அதிமுக பாடுபடும். கடும் முயற்சிகளை மேற்கொள்வோம். இரு சக்கரங்கள் இருந்தால்தான் இலக்கை அடைய முடியும். அதேபோல மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள இரண்டு அரசுகள் இணைந்தால்தான் வளர்ச்சி என்ற இலக்கை அடைய முடியும். மத்திய, மாநில அரசுகள் இணைந்தால்தான் புதுச்சேரிக்கு தேவையான நன்மைகள் கிடைக்கும்.

குழப்பமான நிலையில்தான் புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி இருக்கிறது. ஸ்டாலின் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப இடம் மாறுவார். அவர் ஒரு பச்சோந்தி.

தமிழ்நாட்டிற்கு ஒத்த கொள்கை உடைய கூட்டணியாம். அங்கு இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்துள்ளது. இங்கு அப்படியா? சந்தர்ப்பத்திற்கு ஏற்ப அடிக்கடி இடம் மாறுவார் மு.க. ஸ்டாலின்.

தமிழ்நாட்டில் ஒரு கொள்கை. புதுச்சேரியில் ஒரு கொள்கை வைத்துக்கொண்டு இரட்டை வேடம் போடுகிறது திமுக. இத்தகைய கட்சிக்கு உங்கள் வாக்குகளை வீணாக்காதீர்கள்.

தமிழ்நாட்டில் கொள்ளையடித்தது பத்தாது என புதுச்சேரியிலும் கொள்ளையடிக்க வருகிறது திமுக. புதுச்சேரிக்கு மு.க. ஸ்டாலின் வருவது பிரசாரத்திற்கு அல்ல. பணத்திற்காக வருகிறார். இங்கு இருக்கும் நிதியை கொள்ளையடிக்க வருகிறார்.

மக்களை வாழ வைக்கும் நோக்கம் திமுகவுக்கு இல்லை. கண்ணுக்குத் தெரியாத காற்றிலும் ஊழல் செய்யும் கட்சி திமுக. அலைக்கற்றை மூலம் ஊழல் செய்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் தலைகுனிய வைத்த கட்சி திமுக.

இத்தகைய நபர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். கூப்பிட்ட குரலுக்கு வந்து மக்கள் பணி செய்பவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் என எடப்பாடி பழனிசாமி’’ பேசினார்.

Summary

TN Election 2026 edappaadi palanisamy campaign in pudicherry

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.