மதுரை மாவட்டம், மேலூர் தொகுதி வேட்பாளராக காஞ்சிபுரம் முன்னாள் எம்.பி. விஸ்வநாதனை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
ஏற்கெனவே 27 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் மேலூர் தொகுதி வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். தனக்கு பொது தொகுதி வேண்டும் என அண்மையில் விஸ்வநாதன் கேட்டிருந்த நிலையில் அவருக்கு மேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலூர் தொகுதியில் அதிமுக சார்பில் பெரியபுள்ளான் என்கிற செல்வம், நாதக சார்பில் கோட்டைக்குமார், தவெக சார்பில் மதுரை வீரன் போட்டியிடுகின்றனர். மேலூர் தொகுதி வேட்பாளரான விஸ்வநாதன் தற்போது காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளராக உள்ளார்.
மேலூர் தொகுதி எனக்கு புதிதல்ல, அனைத்து கிராமங்களுக்கும் நடந்தே சென்றுள்ளேன் என்று விஸ்வநாதன் தெரித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸுக்கு 28 பேரவைத் தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Summary
Congress has announced former Kanchipuram MP Viswanathan as the candidate for the Melur constituency.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?

சகோதரர் ராகுல் விரைவில் காங்கிரஸ் வேட்பாளரை அறிவிப்பார்: முதல்வர் ஸ்டாலின்

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏன்?

ராகுல்காந்தி கேரளம் பயணம்! தாமதமாகும் தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



