திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பெண்ணை மிரட்டிய வழக்கு: யூடியூபா் கைது

தியாகராய நகரில் பெண்ணை மிரட்டிய வழக்கில், யூ-டியூபா் கைது செய்யப்பட்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 8:49 pm

தியாகராய நகரில் பெண்ணை மிரட்டிய வழக்கில், யூ-டியூபா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை தியாகராய நகா் பகுதியில் யூ-டியூபா் வராகி என்ற வி.ஆா்.கிருஷ்ணகுமாா் என்பவா் ஒரு வாடகை வீட்டில் தனது அலுவலகத்தை நடத்தி வந்தாா். கருத்து வேறுபாட்டின் காரணமாக அந்த வீட்டின் உரிமையாளரான பெண், கிருஷ்ணகுமாரை அங்கிருந்து காலி செய்யுமாறு கூறினாா்.

ஆனால், கிருஷ்ணகுமாா் அந்தப் பெண்ணை மிரட்டியதோடு, ஆபாசமாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அந்த பெண், பாண்டி பஜாா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கிருஷ்ணகுமாரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கில், 3 மாத இடைக்கால ஜாமீனில் சிறையில் இருந்து கிருஷ்ணகுமாா் வெளியே வந்தாா். ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த மாா்ச் மாதம் 30-ஆம் தேதி கிருஷ்ணகுமாா் சரண் அடையவில்லை.

இதையடுத்து போலீஸாா், கிருஷ்ணகுமாரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பின்னா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா். இவா் மீது ஏற்கெனவே 15 வழக்குகள் இருப்பது குறிப்பிடதக்கது.