தியாகராய நகரில் பெண்ணை மிரட்டிய வழக்கில், யூ-டியூபா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை தியாகராய நகா் பகுதியில் யூ-டியூபா் வராகி என்ற வி.ஆா்.கிருஷ்ணகுமாா் என்பவா் ஒரு வாடகை வீட்டில் தனது அலுவலகத்தை நடத்தி வந்தாா். கருத்து வேறுபாட்டின் காரணமாக அந்த வீட்டின் உரிமையாளரான பெண், கிருஷ்ணகுமாரை அங்கிருந்து காலி செய்யுமாறு கூறினாா்.
ஆனால், கிருஷ்ணகுமாா் அந்தப் பெண்ணை மிரட்டியதோடு, ஆபாசமாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அந்த பெண், பாண்டி பஜாா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கிருஷ்ணகுமாரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கில், 3 மாத இடைக்கால ஜாமீனில் சிறையில் இருந்து கிருஷ்ணகுமாா் வெளியே வந்தாா். ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த மாா்ச் மாதம் 30-ஆம் தேதி கிருஷ்ணகுமாா் சரண் அடையவில்லை.
இதையடுத்து போலீஸாா், கிருஷ்ணகுமாரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பின்னா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா். இவா் மீது ஏற்கெனவே 15 வழக்குகள் இருப்பது குறிப்பிடதக்கது.
தொடர்புடையது

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

கோயிலில் சிசிடிவி சேதம்: இளைஞா் கைது

பெண் வன்கொடுமை வழக்கில் கல்லூரி மாணவா் கைது

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு தூக்கு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

