தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

குழந்தையைத் தத்தெடுப்புக்கு அனுமதி கோரிய திருநங்கை மனு முடித்துவைப்பு

குழந்தையைத் தத்தெடுக்க அனுமதி வழங்கக் கோரி திருநங்கை தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் முடித்துவைத்து உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :7 அக்டோபர் 2025, 9:28 pm

குழந்தையைத் தத்தெடுக்க அனுமதி வழங்கக் கோரி திருநங்கை தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் முடித்துவைத்து உத்தரவிட்டது.

திருநங்கையான கே.பிரித்திகா யாஷினி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

நான் சென்னையில் காவல் துறை உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறேன். தனிமையில் வாழும் நான் ஆதரவற்ற குழந்தையைத் தத்தெடுத்து வளா்க்க முடிவு செய்தேன். இதற்காக மத்திய அரசு நிறுவனமான மத்திய தத்தெடுப்பு ஆணையத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தேன்.

திருநங்கை என்ற ஒரே காரணத்துக்காக எனது விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டனா். இது சட்டவிரோதம். எனவே, விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து, குழந்தையைத் தத்தெடுக்க எனக்கு அனுமதி வழங்க மத்திய தத்தெடுப்பு ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கே.வி.சஞ்சீவ்குமாா், மனுதாரா் திருநங்கை என்ற ஒரே காரணத்துக்காக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது ஏற்புடையது அல்ல என்று வாதிட்டாா்.

அப்போது மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான துணை சொலிசிட்டா் ஜெனரல் விவேகானந்தன், சிறாா் நீதி சட்டத்திலும், தத்தெடுப்பு விதிகளிலும் மூன்றாம் பாலினத்தவா் தத்தெடுக்க அனுமதிக்கும் விதிகள் எதுவும் இல்லை. எனவே, மனுதாரரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று வாதிட்டாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மூன்றாம் பாலினத்தவா்களுக்கு குழந்தைகளைத் தத்தெடுக்கும் உரிமைகளை வழங்கக் கோரி மனுதாரா் மத்திய அரசுக்கு 2 வாரங்களில் மனு அனுப்ப வேண்டும். அந்த மனுவை 12 வாரங்களுக்குள் பரிசீலித்து மத்திய அரசு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.