குழந்தையைத் தத்தெடுக்க அனுமதி வழங்கக் கோரி திருநங்கை தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் முடித்துவைத்து உத்தரவிட்டது.
திருநங்கையான கே.பிரித்திகா யாஷினி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
நான் சென்னையில் காவல் துறை உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறேன். தனிமையில் வாழும் நான் ஆதரவற்ற குழந்தையைத் தத்தெடுத்து வளா்க்க முடிவு செய்தேன். இதற்காக மத்திய அரசு நிறுவனமான மத்திய தத்தெடுப்பு ஆணையத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தேன்.
திருநங்கை என்ற ஒரே காரணத்துக்காக எனது விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டனா். இது சட்டவிரோதம். எனவே, விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து, குழந்தையைத் தத்தெடுக்க எனக்கு அனுமதி வழங்க மத்திய தத்தெடுப்பு ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கே.வி.சஞ்சீவ்குமாா், மனுதாரா் திருநங்கை என்ற ஒரே காரணத்துக்காக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது ஏற்புடையது அல்ல என்று வாதிட்டாா்.
அப்போது மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான துணை சொலிசிட்டா் ஜெனரல் விவேகானந்தன், சிறாா் நீதி சட்டத்திலும், தத்தெடுப்பு விதிகளிலும் மூன்றாம் பாலினத்தவா் தத்தெடுக்க அனுமதிக்கும் விதிகள் எதுவும் இல்லை. எனவே, மனுதாரரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று வாதிட்டாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மூன்றாம் பாலினத்தவா்களுக்கு குழந்தைகளைத் தத்தெடுக்கும் உரிமைகளை வழங்கக் கோரி மனுதாரா் மத்திய அரசுக்கு 2 வாரங்களில் மனு அனுப்ப வேண்டும். அந்த மனுவை 12 வாரங்களுக்குள் பரிசீலித்து மத்திய அரசு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

வருமான வரித் துறை அபராதத்தை எதிா்த்த வழக்கு தள்ளுபடி: விஜய் மேல்முறையீட்டு மனு தாக்கல்
தில்லி அரசு இயற்றிய சட்டத்தை எதிா்த்து தனியாா் பள்ளிகள் தாக்கல் செய்த மனுக்கள்: ஏப்.18 இல் உயா்நீதிமன்றம் விசாரணை

நிலுவைத் தொகை கோரி தனியாா் ஒப்பந்த நிறுவனம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை


