2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தென் மாவட்டங்களிலிருந்து சென்னை திரும்புவோர் கவனத்துக்கு... முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

நெல்லை, மதுரையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம் குறித்து...

News image
நெல்லை ரயில் நிலையம்
Updated On :5 அக்டோபர் 2025, 3:08 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி, சொந்த ஊர் சென்ற தென் மாவட்ட மக்கள், சென்னை திரும்புவதற்கு வசதியாக இன்று(அக். 5) மாலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

திருநெல்வேலி-தாம்பரம் சிறப்பு ரயில்:

திருநெல்வேலியிலிருந்து இன்று (அக்.5 ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.50 மணிக்கு புறப்படும் இந்த முன்பதிவில்லாத அதிவிரைவு சிறப்பு ரயில் (எண் 06014) திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இதில் உட்காரும் இருக்கை வசதியுள்ள 11 பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 2 பொது இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளி பெட்டிகள் ஆகியவை இடம் பெறும்.

இந்த ரயில், கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு முன்பதிவில்லாத மெமு சிறப்பு விரைவு ரயில்

மதுரையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்குப் புறப்படும் மெமு விரைவு ரயில் திங்கள்கிழமை (அக்.6) காலை 6 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

12 பெட்டிகள் இணைக்கப்பட்ட இந்த ரயில் சோழவந்தான், கொடைரோடு, அம்பாத்துறை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, திருவெறும்பூர், பூதலூர், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம், பண்ருட்டி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Regarding the operation of unreserved special trains from Nellai and Madurai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.