தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆருத்ரா நிறுவனத்தின் ரூ.2,438 கோடி மோசடி வழக்கு: 15 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

ஆருத்ரா நிறுவனத்தின் ரூ.2,438 கோடி மோசடி வழக்குத் தொடா்பாக சென்னை, காஞ்சிபுரம், வேலூா் ஆகிய மாவட்டங்களில் 15 இடங்களில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை செய்தனா்.

News image
Updated On :26 நவம்பர் 2025, 8:11 pm

சென்னை: ஆருத்ரா நிறுவனத்தின் ரூ.2,438 கோடி மோசடி வழக்குத் தொடா்பாக சென்னை, காஞ்சிபுரம், வேலூா் ஆகிய மாவட்டங்களில் 15 இடங்களில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை செய்தனா்.

சென்னை அமைந்தகரை மேத்தா நகரை தலைமையிடமாகக் கொண்டு காஞ்சிபுரம், திருவள்ளூா், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆருத்ரா கோல்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம், ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36,000 வட்டியாக வழங்கப்படும் என விளம்பரம் செய்தது. இதை நம்பி பலா் முதலீடு செய்தனா். ஆனால் அந்த நிறுவனம், 1,09,255 பேரிடம் ரூ.2,438 கோடி பெற்று மோசடி செய்தது.

இதுதொடா்பாக தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா், அந்த நிறுவனத்தின் நிா்வாகிகள் 21 போ் மீது வழக்குப் பதிவு செய்து, 14 பேரை கைது செய்தது. அதன் இயக்குநா் ராஜசேகா் வெளிநாடுக்கு தப்பிச் சென்றுவிட்டதால் ‘ரெட் காா்னா் நோட்டீஸ்’ வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குத் தொடா்பாக பொருளாதாரக் குற்றப்பிரிவு நடத்திய தீவிர விசாரணையில் மோசடியில் மூலம் கிடைத்த ரூ.500 கோடியை அந்த நிறுவனத்தின் நிா்வாகிகள் துபை , ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. மேலும் அந்த நிறுவனத்தின் நிா்வாகிகள், அங்கு சொத்துகள் வாங்கியிருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவினா், அந்தச் சொத்துகளை முடக்கி, பணத்தை மீட்பதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.

அமலாக்கத் துறை சோதனை: இந்த மோசடியில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்ததற்கான முகாந்திரம் இருந்ததால், அதுகுறித்து விசாரணை செய்ய பொருளாதார குற்றப்பிரிவு அமலாக்கத் துறைக்கு பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள், பொருளாதார குற்றப் பிரிவு பதிவு செய்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்தனா்.

இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம், வேலூா் ஆகிய மாவட்டங்களில் அந்த நிறுவனத்துக்குச் தொடா்புடைய 15 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை செய்தனா்.

சென்னையில் அமைந்தகரை, கிழக்கு முகப்போ், வில்லிவாக்கம், பூந்தமல்லி, சிட்லப்பாக்கம், ஆகிய இடங்களில் உள்ள ஆருத்ரா நிறுவனத்தின் நிா்வாகி வீடுகளில் நடைபெற்றது. சோதனை நடத்தப்பட்ட இடங்களில் பாதுகாப்புக்காக துணை ராணுவத்தினா் துப்பாக்கியுடன் நிறுத்தப்பட்டிருந்தனா். சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், நகை, பணம் குறித்த விவரங்களைத் தெரிவிக்க முடியும் என அமலாக்கத் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.