2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சென்னையில் ஆன்லைன் வர்த்தக மோசடி: 4 பேர் கைது

சென்னையில் ஆன்லைன் வர்த்தக மோசடியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

News image
கைதானவர்கள்.
Updated On :29 ஜூன் 2025, 9:16 am

DIN

சென்னையில் ஆன்லைன் வர்த்தக மோசடியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை தி.நகரைச் சேர்ந்தவர், வாட்ஸ்அப் செய்தியை பார்த்து அதிக லாபம் தரும் பங்கு வர்த்தக வலைதளத்தில் சேர்வதற்காக அவருக்கு வந்த வாட்ஸ்அப் குழுவில் சேர்ந்துள்ளார். பின்னர் மோசடி செய்தவர்கள் அனுப்பிய லிங்க் மூலமாக ஆன்லைன் பங்கு வர்த்தக வலைதளத்தில் கிளிக் செய்தவரை ஐபிஓவில் முதலீடு செய்ய சொல்லி தூண்டியும், இணையதளம் மூலம் பங்கு வர்த்தகம் செய்து அதிக லாபம் ஈட்டலாம் என்று மோசடி நபர்கள் கூறிய வார்த்தைகளை நம்பி பல்வேறு வங்கி கணக்குகளில் பல பரிவர்த்தனைகளில் ரூபாய் 2 கோடியே 26 லட்சம் பணத்தினை முதலீடு செய்து இழந்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின்பேரில், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருநெல்வேலி மற்றும் தென்காசி பகுதிகளில் மோசடி குற்றவாளிகள் ஒன்றாக இணை போலி வங்கி கணக்குகளை துவங்கி அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி மோசடி செய்து பணத்தை பெற்றுள்ளதாக கண்டறியப்பட்டது. பின்னர் இதுதொடர்பாக சத்தியநாராயணன், மணிவேல், ரோஷன், சிம்சேன் ஆகிய 4 பேர்கள் கைது செய்யப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து கமிஷனாக பெறப்பட்ட ரூபாய் 4,38,000/- பணம் மற்றும் மொபைல் போன்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 4 பேரையும் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து அவர்கள் அனைவரும் சென்னை புழல் மத்திய சிறையில் புழலில் அடைக்கப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் வணிக நோக்கத்திற்காக தற்காலிகமாக வாடகை கட்டடங்களில் தங்கி வங்கிகளில் பல நடப்புக் கணக்குகளை தொடங்கி, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு செயல்பட்டு வந்துள்ளார்கள்.

பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து முதலீட்டை பெறுவதற்கும், ஏஜெண்டுகள் மூலம் நிதியை வெளிநாடுகளுக்கு மாற்றுவதற்கும் பொது மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த குழு செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆன்லைன் முதலீட்டு மோசடி மற்றும் ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் விளம்பரம் மூலம் குறிவைக்கப்படுவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Summary

Police have arrested 4 people involved in an online trading scam in Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.