மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

மேட்டூர் அணை 16 கண் மதகு பாலத்தில் பராமரிப்புப் பணி: சென்னை ஐஐடி பேராசிரியர் ஆய்வு

மேட்டூர் அணை 16 கண் மதகு பாலத்தில் பராமரிப்புப் பணி நடைபெற்று வரும் நிலையில் சென்னை ஐஐடி பேராசிரியர் ஆய்வு மேற்கொண்டார்.

News image

மேட்டூர் அணையின் 16 மதகு வழியாக பாயும் காவிரி - கோப்புப்படம்

Updated On :23 ஜூன் 2025, 9:39 am

சேலம் : மேட்டூர் அணையின் 16 கண் மதகு பாலம் பகுதியில் நடைபெற்றுவரும் பராமரிப்புப் பணிகளை சென்னை ஐ.ஐ.டி. கட்டடவியல் துறை பேராசிரியர் அழகு சுந்தரமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.

மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் போது 16 கண் மதகு பாலம் வழியாக உபரி நீர் திறக்கப்படும். இதன் மூலம் 30 டி.எம்.சி. வரை தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இந்நிலையில் 19 கோடி ரூபாய் மதிப்பில் 16 கண் மதகு பாலத்தின் தூண்கள் மற்றும் வளைவுகளை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை இன்று சென்னை ஐ.ஐ.டி.யின் கட்டடவியல் துறை பேராசிரியர் அழகு சுந்தர மூர்த்தி, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் சென்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து அழகு சுந்தரமூர்த்தி கூறுகையில் சேதம் அடைந்த கான்கிரீட் பூச்சுகளை அகற்றிவிட்டு மைக்ரோ கான்கிரீட் பூசப்பட்டு தூண்கள் பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. மைக்ரோ கான்கிரீட் பூசுவதன் மூலம் 50 முதல் 100 ஆண்டுகள் வரை தூன்கள் பலமாக இருக்கும் என்றார்.

16 கண் மதகு பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டு அதன் அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது சேலம் மேல் காவிரி வடிநிலவட்ட கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார், அணை நிர்வாக பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவிப் பொறியாளர் சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.