ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மன்னார்குடியில் மணல் லாரி மோதி பள்ளி மாணவன் பலி!

மன்னார்குடியில் மணல் லாரி மோதி பள்ளி மாணவன் பலியானது பற்றி...

News image

அமரேஷ் - Dinamani

Updated On :2 ஜூலை 2025, 6:03 am

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மணல் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் தந்தையுடன் பள்ளிக்குச் சென்ற மாணவன் புதன்கிழமை பலியாகினார்.

மன்னார்குடி ராவணன் தெருவைச் சேர்ந்தவர் சிவகணேஷ் மகன் அமரேஷ் (வயது 12). இவர் மன்னார்குடி புதிய புறவழிச் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து படித்து வந்தார். புதன்கிழமை காலை வழக்கம் போல் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் அமரேஷ் பள்ளிக்குச் சென்றுள்ளார்.

ருக்மணி பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது தனியார் திரையரங்கம் அருகே அவ்வழியே மணல் ஏற்றி வந்த லாரி, நிலைதடுமாறி சிவகணேஷ் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். இதில் லாரியின் சக்கரம் அமரேஷ் மீது ஏறி இறங்கியதில் நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த மன்னார்குடி காவல் நிலைய போலீசார் நிகழ்விடத்திற்கு வந்து அமரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சிவகணேஷும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

A student who was going to school with his father on a two-wheeler was killed on Wednesday when he was hit by a sand truck in Mannargudi, Tiruvarur district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.