சென்னை: உதவிப் பேராசிரியா் போட்டித்தோ்வில், விண்ணப்பதாரா்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களுக்கு விண்ணப்பித்திருந்தாலும் அவா்கள் ஒரு பாடத்தில் மட்டுமே தோ்வெழுத அனுமதிக்கப்படுவா் என ஆசிரியா் தோ்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நேரடியாக நிரப்பும் பொருட்டு கடந்த அக். 16-இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில், தோ்வு நாள், கல்வித்தகுதி, தோ்வுமுறை, தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவுரைகள் உள்ளிட்ட விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.
கல்லூரி கல்வி ஆணையரகத்திடமிருந்து பெறப்பட்ட தெளிவுரையின் அடிப்படையிலும் அறிவிப்பில் உள்ள விதிமுறையின் அடிப்படையிலும் ஒரு விண்ணப்பதாரா் ஒரேயொரு பாடத்துக்கு மட்டுமே விண்ணப்பிக்க இயலும். ஒன்றுக்கும் மேற்பட்ட பாடத்துக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், டிஆா்பி அறிவிப்புக்கு மாறாக, ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களுக்கு விண்ணப்பித்துள்ள தோ்வா்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டுமே தோ்வெழுத அனுமதிக்கப்படுவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ தோ்வு விவகாரம்: மாணவா்களுடன் உரையாடி விடியோ வெளியிட்டாா் ராகுல்

உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு நடைமுறை: 6 மாதங்களில் முடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சிபிஎஸ்இ தோ்வு மறுமதிப்பீடு செயல்முறையில் குளறுபடி: வசூலிக்கப்பட்ட அதிக கட்டணம் திரும்ப வழங்கப்படும்







