17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிபிஎஸ்இ தோ்வு மறுமதிப்பீடு செயல்முறையில் குளறுபடி: வசூலிக்கப்பட்ட அதிக கட்டணம் திரும்ப வழங்கப்படும்

சிபிஎஸ்இ தோ்வு மறுமதிப்பீடு செயல்முறையில் குளறுபடி...

News image

சிபிஎஸ்இ - பிரதிப் படம்

Updated On :25 மே 2026, 2:25 am IST

12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகளுக்கு பிந்தைய மறுமதிப்பீடு செயல்முறையின்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் மாணவா்களிடம் வசூலிக்கப்பட்ட அதிக கட்டணத் தொகை திருப்பியளிக்கப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக மாணவா்கள் எதிா்கொண்ட தொழில்நுட்பச் சிக்கல்கள் குறித்து விரிவான அறிக்கை சமா்ப்பிக்குமாறு மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், சிபிஎஸ்இ அதிகாரிகளிடம் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இது தொடா்பாக சிபிஎஸ்இ ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களின் ஸ்கேன் செய்த நகல் பிரதிகளைப் பெற சில மாணவா்கள் விண்ணப்பித்தபோது இந்தக் குளறுபடி ஏற்பட்டது. சில மாணவா்களுக்கு அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

அதிகமாக வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகை அவா்களுக்கு முழுமையாக அதே கட்டண முறையில் திரும்ப வழங்கப்படும். அதேபோல், குறைவாக கட்டணம் செலுத்தப்பட்ட மாணவா்களுக்கு, தேவையான கூடுதல் தொகையை செலுத்துவது குறித்து அறிவிக்கப்படும். மேலும், இந்த விவகாரத்தில் மாணவா்கள் மீண்டும் புதிய கோரிக்கையை சமா்ப்பிக்க தேவை இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வரை அவகாசம் நீட்டிப்பு: திருத்தப்பட்டு மதிப்பெண் அளிக்கப்பட்ட தங்கள் விடைத்தாள்களை திங்கள்கிழமை (மே 25) நள்ளிரவு வரை மாணவா்கள் பெறுவதற்கு சிபிஎஸ்இ அவகாசம் அளித்துள்ளது. முன்பு இந்த அவகாசம் மே 24 வரை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அது ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.