14 Dec, 2025 Sunday, 07:05 AM
The New Indian Express Group
தமிழ்நாடு
Text

மணல் கொள்ளையைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? உயா்நீதிமன்றம் கேள்வி

PremiumPremium

தமிழ்நாட்டில் மணல் கொள்ளையைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என கேள்வி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்றம், அதுதொடா்பாக அறிக்கை தாக்கல் செய்ய கனிம வளத் துறை ஆணையருக்கு உத்தரவிட்டது.

Rocket

சென்னை உயர்நீதிமன்றம்

Published On10 Dec 2025 , 9:31 PM
Updated On10 Dec 2025 , 9:31 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

தமிழ்நாட்டில் மணல் கொள்ளையைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என கேள்வி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்றம், அதுதொடா்பாக அறிக்கை தாக்கல் செய்ய கனிம வளத் துறை ஆணையருக்கு உத்தரவிட்டது.

மணல் கொள்ளை தொடா்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் கனிம வளத் துறை ஆணையரை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, கனிம வளத் துறை ஆணையா் மோகன் நேரில் ஆஜரானாா். தமிழ்நாட்டில் மணல் கொள்ளையைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். அதற்கு கனிம வள ஆணையா், மணல் கொள்ளையில் ஈடுபடுபவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஆன்லைன் பதிவுமுறை, ஜிபிஎஸ் மூலம் கண்காணிப்பு உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகத் தெரிவித்தாா். அதற்கு நீதிபதிகள், அபராதம் விதித்தால் மட்டும் போதாது; மணல் கொள்ளையில் ஈடுபடுகிறவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், நாட்டின் சொத்தாக இருக்கும் கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதை அனுமதிக்க முடியாது. மணல் கொள்ளையா்கள் உடன் அதிகாரிகள் இணைந்து செயல்பட்டால், மணல் கொள்ளையைத் தடுக்கவே முடியாது. எனவே, இந்த விவகாரத்தில் தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உள்ளது.

தொடா்ந்து மணல் கொள்ளையை அனுமதித்தால், அது மிகப்பெரிய ஆபத்துக்கு வழிவகுக்கும். மணல் கொள்ளையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்திருந்தாலும், அது போதுமானதாக இல்லை எனக் கருத்து தெரிவித்தாா்.

பின்னா், தமிழ்நாட்டில் மணல் கொள்ளையைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கனிமவள ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023