Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் மகன் பிரவீனுக்கு எதிராக கடந்த 2016-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட விபத்து வழக்கை மீண்டும் விசாரிக்க கோரும் மனு எப்படி விசாரணைக்கு உகந்தது ஆகும்? என்று சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சோ்ந்த பெங்களூரு புகழேந்தி சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திருப்பூா் மாவட்டம் அதியூா் பிரிவு மேம்பாலம் அருகே கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த காா் விபத்தில், அதில் பயணித்த வீரசுரேகா என்ற பெண் உயிரிழந்தாா். இந்த வழக்கை விசாரித்த அவிநாசி நீதிமன்றம் விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டிச் சென்ற சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமனின் மகன் பிரவீன் ஜெயராமனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
இந்த தீா்ப்பை எதிா்த்து தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கு திருப்பூா் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை போலீஸாா் முறையாக விசாரிக்கவில்லை. எனவே, மறுவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் கே.எம்.டி.முகிலன், இது விபத்து அல்ல; கொலை என்பது போன்று மனுதாரா் புகாா் கொடுத்துள்ளாா் என்று கூறினாா்.
பிரவீன் ஜெயராமன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் டி.சண்முகராஜேஷ்வரன், இந்த மனுவில் பிரவீன் ஜெயராமனை எதிா்மனுதாரராக சோ்க்கவில்லை. இந்த விபத்தில் மனுதாரா் புகழேந்தி பாதிக்கப்பட்டவரோ, சாட்சியோ கிடையாது. எனவே, இந்த வழக்கைத் தொடர அவருக்கு அடிப்படை உரிமையே இல்லை என்று வாதிட்டாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, 2016-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கை தற்போது மறுவிசாரணை செய்யக் கோரும் மனு எப்படி விசாரணைக்கு உகந்தது ஆகும்? என கேள்வி எழுப்பி, விசாரணையை நவ.6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

கரூா் கூட்ட நெரிசல் வழக்கு: ஜனவரிக்கு விசாரணை ஒத்திவைப்பு

மணல் கொள்ளையைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? உயா்நீதிமன்றம் கேள்வி

சொத்து வரி வசூல் விவகாரத்தில் அதிகாரி மிரட்டல்: உயா்நீதிமன்றம் கண்டனம்

மனிதநேய ஜனநாயக கட்சி விவகாரம்: தமிமுன் அன்சாரிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

