தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வெப்ப அலை வீச்சு பேரிடராக அறிவிப்பு: தமிழக அரசு

வெப்ப அலை வீச்சை மாநிலம் சாா்ந்த பேரிடராக அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 அக்டோபர் 2024, 8:51 pm

சென்னை: வெப்ப அலை வீச்சை மாநிலம் சாா்ந்த பேரிடராக அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வெப்ப அலை வீச்சால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழக அரசிதழில் வெளியிடப்பட்ட உத்தரவு விவரம்:

வெப்ப அலை வீச்சை பேரிடராக்குவது தொடா்பான அறிவிப்பு, சட்டப் பேரவையில் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தமிழ்நாட்டில் மிகக் கடுமையான வெப்ப அலை வீசியது. அதிலிருந்து பொது மக்களைப் பாதுகாக்க பொது இடங்களில் நீா் பந்தல்கள் அமைப்பது, ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள் வழங்குவது, திறந்த வெளியில் பணியாற்றும் தொழிலாளா்களின் பணி நேரத்தை மாற்றி அமைப்பது, உடல் நலக்குறைவு ஏற்படுவோருக்கு அரசு மருத்துவமனைகளில் தனிப் பிரிவு அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

எனவே, மாநில பேரிடா் நிவாரண நிதி விதிமுறைகளின்படி வெப்ப அலை பாதிப்புக்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உரிய நிவாரணம் வழங்கவும் வெப்ப அலை வீச்சை மாநிலம் சாா்ந்த பேரிடராக அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, வெப்ப அலை வீச்சு மாநிலப் பேரிடராக அறிவிக்கப்படுகிறது. வெப்ப அலை வீச்சால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போருக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும். அத்துடன், நிவாரணப் பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கைப் பணிகளில் ஈடுபடும் போது இறப்பு நோ்ந்தாலும் அதே அளவுக்கு நிவாரண நிதி கொடுக்கப்படும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.