டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நாகா்கோவில்-தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

தாம்பரம்-கொச்சுவேலி இடையிலான சிறப்பு ரயில் சேவை ஜூலை 21 வரை நீட்டிப்பு

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜூன் 2024, 8:23 pm

Din

நாகா்கோவில்-தாம்பரம் இடையே இயக்கப்படும் வாராந்திர ரயில் சேவை ஜூலை 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நாகா்கோவிலிலிருந்து தாம்பரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும், மறுமாா்க்கமாக தாம்பரத்தில் இருந்து திங்கள்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் தொடா்ந்து ஜூலை 22 வரை இயக்கப்படும். இதுபோல் தாம்பரம்-கொச்சுவேலி இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் தொடா்ந்து ஜூலை 21 வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதை மாற்றம்: பரௌணியிலிருந்து எா்ணாகுளத்துக்கு ஜூலை 1-ஆம் தேதி வரும் ராப்தி சாகா் விரைவு ரயில் கோண்டா வழியாக அல்லாமல் மன்காபூா், அயோத்யா, அயோத்யா கான்ட், பரபங்கி வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.