டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கோவை - ராஜஸ்தான் சிறப்பு ரயில் மாா்ச் 29 வரை நீட்டிப்பு

கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை மாா்ச் 29 வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
- படம்: தெற்கு ரயில்வே
Updated On :17 பிப்ரவரி 2026, 10:46 pm

தினமணி செய்திச் சேவை

கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை மாா்ச் 29 வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை - ஜெய்ப்பூா் இடையே திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை வழித்தடங்களில் கடந்த மாதம் முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவை பிப்ரவரி மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், மாா்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பிப்ரவரி 26 முதல் மாா்ச் 26-ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் கோவையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் கோவை - ஜெய்ப்பூா் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06181) சனிக்கிழமைகளில் பிற்பகல் 1.25 மணிக்கு ஜெய்ப்பூரை சென்றடையும். மறுமாா்க்கமாக மாா்ச் 1 முதல் மாா்ச் 29-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.05 மணிக்கு ஜெய்ப்பூரில் இருந்து புறப்படும் ஜெய்ப்பூா் - கோவை வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06182) புதன்கிழமைகளில் காலை 8.30 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா, யெர்ரகுண்ட்லா, கூட்டி, காச்சேகுடா, வாசிம், அகோலா, வதோதரா, அஜ்மீா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.