இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு!

முல்லைப்பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

News image

முல்லைப் பெரியாறு அணை

Updated On :13 ஜூன் 2024, 5:03 pm IST

முல்லைப்பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில், பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க, கடந்த 2014-இல் மூன்று பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது.

பின்னர், கடந்த 2022-இல் இரு மாநிலங்களைச் சேர்ந்த 2 தொழில் நுட்ப வல்லுனர்கள் கண்காணிப்புக் குழுவில் சேர்க்கப்பட்டனர். தற்போது மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் ராஜேஷ் இந்தக் குழுவின் தலைவராக உள்ளார்.

தமிழக பிரதிநிதிகளாக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழும தலைவர் சுப்பிரமணியம், கேரள பிரதிநிதிகளாக கேரள நீர்ப்பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் வேணு, கேரள நீர்ப்பாசனத்துறை நிர்வாக தலைமை பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இக்குழு கடந்த ஆண்டு மார்ச் 27-இல் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தனர்.

இதையடுத்து, தற்போது மத்திய கண்காணிப்புக் குழுவினர் முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு செய்து வருகின்றனர்.

இன்றும்(ஜூன் 13), நாளையும்(ஜூன் 14) ஆய்வு நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.