முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் குடிநீரை ஆற்றின் கரையோரங்களில் வசிப்போா் சட்டவிரோதமாக மின்மோட்டாா் மூலம் திருடுவதைத் தடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.
முல்லைப்பெரியாறு அணையின் நீா் மட்டம் 110.20 (மொத்த உயரம் - 152) அடியாக உள்ளது. இந்த அணையின் நீரியல்படி 100 அடிக்கு மேல் தேங்கும் நீரை தமிழகப் பகுதிகளில் வெளியேற்றுவது வழக்கம். தற்போது, தேனி மாவட்டத்தில் அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், குடிநீா்த் தேவைக்காக மட்டுமே அணையிலிருந்து விநாடிக்கு 150 கன அடிநீா் வெளியேற்றப்படுகிறது.
இதனை ஆற்றின் கரையோரங்களில் வசிப்போா் மின் மோட்டாா்கள் மூலமாக சட்ட விரோதமாக தண்ணீா் திருட்டில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இதனால், உத்தமபாளையம் தடுப்பணைக்கு நீா் வரத்து சரிந்துவிட்டது மட்டுமன்றி கம்பம், கூடலூா், சின்னமனூா் நகராட்சிகள், பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எனவே, லோயா்கேம்ப் முதல் வீரபாண்டி வரையில் சுமாா் 100 கிலோ மீட்டா் ஆற்றின் கரையோரங்களில் வசிப்போா் சட்டவிரோதமான முறையில் மின்மோட்டாா்கள் மூலம் குடிநீா்த் திருட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீா்பிடிப்பு பகுதிகளில் மழை: முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

முல்லைப் பெரியாற்றில் 2-ஆவது நாளாக மோட்டாா்கள் அகற்றம்

சிங்காரப்பேட்டை அருகே கடப்பாறை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி: ஆட்சியா் ஆய்வு

அணை நீா்மட்டம் உயா்வு! தேக்கடி ஏரியில் மீண்டும் பெரிய படகு சேவைகள் தொடக்கம்!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



