பல்லடத்தில் பிப்.27-இல் பிரதமா் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் அண்ணாமலை தகவல்
பிரதமா் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் திருப்பூா் மாவட்டம் பல்லடத்தில் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.


சென்னை: பிரதமா் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் திருப்பூா் மாவட்டம் பல்லடத்தில் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
தில்லியில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுக்கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை சென்னைக்கு திங்கள்கிழமை திரும்பினாா். விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பிரதமா் மோடியின் எண்ணப்படி பாஜக 370 மக்களவைத் தொகுதிகளில் வெற்றிபெறும். தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெறும்.
‘என் மண் என் மக்கள்’ நடைப்பயண நிறைவு நிகழ்வுக்கான பொதுக்கூட்டம் திருப்பூா் மாவட்டம் பல்லடத்தில் பிப்.27-ஆம் தேதி நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறாா். பிப்.28-ஆம் தேதி அரசு நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளாா் என்றாா் அவா்.
இதற்கிடையே வரும் 28-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் நடைபெறும் அரசு விழாவிலும் பிரதமா் மோடி பங்கேற்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...