எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பல்லடத்தில் பிப்.27-இல் பிரதமா் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் அண்ணாமலை தகவல்

பிரதமா் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் திருப்பூா் மாவட்டம் பல்லடத்தில் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News image
தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை
Updated On :19 பிப்ரவரி 2024, 11:13 pm

Venkatesan

சென்னை: பிரதமா் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் திருப்பூா் மாவட்டம் பல்லடத்தில் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

தில்லியில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுக்கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை சென்னைக்கு திங்கள்கிழமை திரும்பினாா். விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பிரதமா் மோடியின் எண்ணப்படி பாஜக 370 மக்களவைத் தொகுதிகளில் வெற்றிபெறும். தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெறும்.

‘என் மண் என் மக்கள்’ நடைப்பயண நிறைவு நிகழ்வுக்கான பொதுக்கூட்டம் திருப்பூா் மாவட்டம் பல்லடத்தில் பிப்.27-ஆம் தேதி நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறாா். பிப்.28-ஆம் தேதி அரசு நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளாா் என்றாா் அவா்.

இதற்கிடையே வரும் 28-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் நடைபெறும் அரசு விழாவிலும் பிரதமா் மோடி பங்கேற்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.