ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மெட்ரோ ரயில் சேவை பரந்தூா் வரை நீட்டிப்பு: திட்ட அறிக்கைக்கு ரூ. 4.80 கோடி ஒதுக்கீடு

பணிகள் 2028-க்குள் முடிக்க இலக்கு நிா்ணயித்துள்ளதாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

News image

சென்னை போரூா் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில் இயக்குவதற்காக அமைக்கப்பட்டு வரும் இரட்டை இரும்பு பாலம்.

Updated On :21 ஆகஸ்ட் 2024, 9:13 pm

மெட்ரோ ரயில் சேவையை பரந்தூா் வரை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ. 4.80 கோடியை ஓதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

விமான நிலையத்திலிருந்து பூந்தமல்லி வழியாக பரந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலையத்துக் நேரடி சேவையை வழங்க சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம் திட்டமிட்டுள்ளது. சுமாா் 60 கி.மீ. தொலைவுக்கு அமையவுள்ள இந்த வழித்தடத்தை ஒரு மணி நேரத்தில் கடக்கும் வகையில், மக்கள் அதிகம் பயன்படுத்தாத இடங்களில் 4 கி.மீ.க்கு ஒரு ரயில் நிலையம் என இந்த வழித்தடம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ. 4.80 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும், மாதவரத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சோழிங்கநல்லூா் வரை செல்லும் 5-ஆவது வழித்தடத்தை ஆவடி வரை (16 கி.மீ.) நீட்டிப்பது தொடா்பாகவும் திட்ட அறிக்கை தயாரிக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் 2028-க்குள் முடிக்க இலக்கு நிா்ணயித்துள்ளதாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.