டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் முடங்கும் அபாயம்!

நிதி பற்றாக்குறையால் 100 வேலைவாய்ப்பு திட்டம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:06 am

DIN



புதுதில்லி: நிதி பற்றாக்குறையால் 100 வேலைவாய்ப்பு திட்டம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

2005 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கொண்டுவரப்பட்டது. 

உழைப்பதற்கான உரிமை என்ற நோக்கத்துடன் ஊரக பகுதி ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காக, 2005 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கொண்டுவரப்பட்டது. 

அரசே நேரடியாக ஊராட்சி செயலர், தலைவர் மூலம் வேலை வழங்கப்படுகிறது. ஒப்பந்ததாரர் யாரும் கிடையாது. இந்த திட்டத்தின் மூலம் நீர் நிலைகளை புதுப்பித்தல், ஏரி, குளங்களை பராமரித்தல், மரம் நடுதல், காடு வளர்ப்பு, பாசனக் கால்வாய் பராமரிப்பு, தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்த திட்டத்தில் மொத்த பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. பாகுபாடுகளின்றி இருபாலருக்கும் ஒரே சம்பளமாக ரூ.249 வழங்கப்படுகிறது.

கரோனா பேரிடர் நாள்களில் இந்த திட்டம் பல லட்சம் பேரை பட்டினியில் இருந்து காப்பாற்றி உள்ளதாக  சர்வதேச பொருளாதா அமைப்புகள் பாராட்டியுள்ளது. 

இந்த நிலையில், நிதி பற்றாக்குறையால் 100 வேலைவாய்ப்பு திட்டம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

அதாவது, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கு 2022-23 நிதியாண்டில் ரூ.89,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டில், ரூ.60,000 கோடி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. 

ஆனால் தேவையின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் நிதி குறைக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.