சென்னை: தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களின் நிலத்தடி நீர்மட்ட நிலவரம் குறித்த பட்டியல் அபாய மணியாக ஒலிக்கிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், 19 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்திருக்கிறது. அதேவேளையில் 17 மாவட்டங்களில் கடந்த ஆண்டைக் காட்டிலும் நிலத்தடி நீர்மட்டம் சற்று அதிகரித்தும் உள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் இந்த பிப்ரவரி மாதம் கோடை வெப்பம் குறைவாக இருந்தாலும், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்திருப்பது கவலையை ஏற்படுத்துகிறது.
இதையும் படிக்க.. சென்னை 2ம் கட்ட மெட்ரோ பணி: கைவிடப்படும் 6 ரயில் நிலையங்கள்
நெல்லையில் 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் 2.28 மீட்டரில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் தற்போது 5.31 மீட்டராக சரிந்துள்ளது.
திருப்பத்தூரில் 0.07 மீட்டருக்குத்தான் சரிந்துள்ளது. கிருஷ்ணகிரியல் 6.13 மீட்டரில் இருந்து தற்போது 2.67 மீட்டராக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இது குறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் கூறுகையில், வழக்கம் போல, கடந்த வடகிழக்குப் பருவமனை காலத்தில் ஜனவரி மாதம் வரை நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து வந்தது. ஆனால், பிப்ரவரியில் வெப்பம் அதிகரிக்கும் போது நீர்மட்டமும் குறையத் தொடங்கியது. அதிகாரிகள் தொடர்ந்து நீர்மட்ட நிலவரத்தை கண்காணித்து வருகிறார்கள். அதே வேளையில் மக்களும் இக்கணமே சிக்கனத்தை கடைப்பிடித்து நீரை சேமிக்க வேண்டுகோள் விடுக்கிறார்கள். அப்போதுதான் கோடை வெயிலின்போது தண்ணீர் இருப்பு உறுதி செய்யப்படும் என்று வலியுறுத்துகிறார்கள்.
இதையும் படிக்க.. அரிசி விலை கிலோவுக்கு ரூ.10 அதிகரிக்கலாம்!
நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க, நீர்நிலைகளை தூர்வாரி சரியாக பராமரிப்பதும், பயன்பாடற்று போன நீர்நிலைகளைக் கண்டறிந்து அவற்றில் நீர்சேமிக்கும் திறனை அதிகரிக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆற்காட்டில் வாக்களித்த வேட்பாளா்கள்

காஞ்சிபுரத்தில் வாக்களித்த வேட்பாளா்கள்

மீன ராசிக்கு பணவரவு: தினப்பலன்கள்!

இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


