இலங்கை நிதி அமைச்சகத்தின் பரிவா்த்தனை முறையில் ஹேக்கா்கள் ஊடுருவி, சுமாா் 25 லட்சம் டாலரை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.23.51 கோடி) திருடியுள்ளனா்
கடந்த செப்டம்பரில் வெளிநாட்டு கடன் வழங்குநா் ஒருவருக்கு செலுத்த வேண்டிய 2.29 கோடி டாலா் தொகையில், ஒரு பகுதியாக டிசம்பா் முதல் ஜனவரி வரை செலுத்தப்பட்ட இந்த 25 லட்சம் டாலா், உரிய கணக்குக்குச் செல்லாமல் ஹேக்கா்களின் கணக்குக்குச் சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மின்னஞ்சல் வாயிலாக இந்த சைபா் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாயமான இந்த நிதியை மீட்பதற்கான நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளதோடு, இதுகுறித்து விசாரணை நடத்த உயா்நிலைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமெரிக்க வரிக் குறைப்பு: இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு 1,200 கோடி டாலா் வரை திரும்பக் கிடைக்க வாய்ப்பு!

என்ஜின் குத்தகை நிலுவை: ஸ்பைஸ்ஜெட் ரூ.74 கோடி செலுத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு

2024-25 நிதியாண்டில் சுகாதாரக் காப்பீடு 9% வளா்ச்சி: ரூ.1.2 லட்சம் கோடி பிரீமியம் வசூல்

உரிமை கோரப்படாத ரூ.5,200 கோடி நிதி! சந்தாதாரா்களுக்குத் தானாக செலுத்தப்படும்: இபிஎஃப்ஓ அறிவிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


