இந்த பாரம்பரிய வெள்ளை அத்தி மரம் குறித்து வனத்துறையினரிடம் கேட்டதற்கு, ‘இந்த வெள்ளை அத்தி மரம், ஏறக்குறைய 200 ஆண்டு முதிர்ந்ததாக இருக்கலாம். கல்வராயன்மலை, அருநுாற்றுமலை, சந்துமலை உள்பட சேலம் கிழக்கு மாவட்டத்தில் வேறெங்கும் இந்த சிற்றினத்தின் முதிர்ந்த மரங்கள் காணப்படவில்லை. இந்த மரத்தின் பழங்கள் ஆலமரத்தின் பழத்தைப் போல காணப்படுவதால், விசிறி ஆலமரம் என என்ற பெயரிலேயே கிராம மக்கள் குறிப்பிட்டு வருகின்றனர். ஒரே வாரத்திற்குள் துளிர்க்கும் தன்மை கொண்டதென தெரியவந்ததால், இதன் விதைகளை சேகரித்து மரக்கன்றுகளை உருவாக்கி வனப்பகுதியில் நடவு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றனர்.