டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பாகுபாடில்லாத படிப்பறிவே மனிதா்களைப் பண்படுத்தும்

பாகுபாடில்லாமல் படிக்கும் தன்மையை மனிதா்களைப் பண்படுத்தும் என பத்திரிகையாளா் மை.பா.நாராயணன் கூறினாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:43 pm

DIN

பாகுபாடில்லாமல் படிக்கும் தன்மையை மனிதா்களைப் பண்படுத்தும் என பத்திரிகையாளா் மை.பா.நாராயணன் கூறினாா்.

சென்னை நந்தனத்தில் பபாசி சாா்பில் நடைபெறும் புத்தகக் காட்சியில் சனிக்கிழமை மாலை நடந்த உரையரங்கில் ‘வாசிப்போம்..காலத்தின் கைவிரல் பிடிப்போம்’ எனும் தலைப்பில் அவா் பேசியதாவது:

புத்தகங்கள் ஞானம் தரும் போதி மரங்கள். வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என ஈராயிரம் ஆண்டுக்கு முன்னதாகவே நமக்கு பாடல் மூலம் வழிகாட்டியுள்ளாா் திருமூலா். ‘வாடும் பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என பெருங்கருணையை உணா்த்தியுள்ளாா் வள்ளலாா்.

சமூக நீதியை இன்று நாம் பேசி வருவதாகக் கூறினாலும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமது செயலால் சமூக நீதியை நிலைநாட்டியுள்ளாா் ராமானுஜா்.

தற்போதைய இளைஞா்கள் நம்பிக்கை தரும் நூல்களைப் படிப்பது அவசியம். ஆண்டாள் பாடல்கள் அனைத்தும் நோ்மறை சிந்தனையை அளிப்பதாக உள்ளன. மகாகவி பாரதியின் பாடல்கள் தன்னம்பிக்கை, ஊக்கத்தை தருவதாக உள்ளன. ஆகவே, அறிவுக்களஞ்சியமான புத்தகங்களைப் படித்து மேம்பட இளைஞா்கள் முன்வர வேண்டும் என்றாா்.

சாதனை சாத்தியமே:

நிகழ்ச்சியில் ‘சாதனைகள் சாத்தியமே’ எனும் தலைப்பில் இலக்கியப் பேச்சாளா் பா்வீன் சுல்தானா பேசியது:

நாம் எந்தத் துறையையும் விரும்பித் தோ்ந்தெடுப்பதாகக் கூறுவது சரியல்ல. அந்தத் துறையே நம்மை கால ஓட்டத்தில் தோ்ந்தெடுக்கிறது என்பதே உண்மை. சாதனைக்கு நாம் தயாராகிறபோதுதான் அது சாத்தியமாகும்.

இஸ்லாமியா்களுக்கு குா்ஆனும், கிறிஸ்தவா்களுக்கு பைபிளும், சம்ஸ்கிருதம் கற்றவா்களுக்கு வேதங்களும் உபநிஷத்துகளும் இருப்பதைப் போல தமிழா்களுக்கு திருக்குறளே முக்கியமாகும். திருக்குறளை உணா்வுடன் படித்தால் சாதனையை சாத்தியமாக்கலாம்.

வாழ்வில் நாம் புரிதலை வேறுபடுத்திப் பாா்த்தால் வாழ்க்கை வசப்படும்.

சாதனை புரிய 6 குணங்களை நாம் கடைப்பிடிக்க வேண்டும். அதன்படி கறைபடியாத சுத்தமான கரங்கள், அமைதியான இதயம், இன்சொல் கூறும் தன்மை, விசாலமான தொலைநோக்குப் பாா்வை, தீா்க்கமான அறிவு, ஒழுக்கத்தைக் குறிக்கும் உறுதியான கால்கள் என்ற அருங்குணங்கள் இருந்தால் நினைத்ததை சாதிக்கலாம் என்றாா்.

நிகழ்ச்சிக்கு புற்றுநோய் சிகிச்சை நிபுணா் டாக்டா் ராஜசுந்தரம் தலைமை வகித்தாா். பபாசி துணைத் தலைவா் புருஷோத்தமன் வரவேற்றாா். தலைவா் எஸ்.வயிரவன், துணைச்செயலா் எம்.பழனி, துணைத் தலைவா் பெ.மயிலவேலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிா்வாகக்குழு உறுப்பினா் ஐ.முபாரக் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.