வேலூர்: வேலூர் மாவட்டம் கனியம்பாடி பஞ்சாயத்துக்கு உள்பட்ட கம்மசமுத்திரத்தில் கழிப்பறை கட்ட வசதி இல்லாத பட்டியலினத்தவருக்காக இடுகாட்டுக்கு மத்தியில் பொதுக்கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.
கம்மசமுத்திரத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 70 குடும்பங்கள் உள்ளன. இவர்களில் கழிப்பறை கட்ட வசதி இருந்த 50 சதவிகித வீடுகளுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டன.
இதையும் படிக்க.. 3000 ஆண்டுகளுக்கு முன்பே மூளை அறுவைசிகிச்சையா? அதிரும் விஞ்ஞானிகள்
மற்ற வீட்டினர் அக்கம் பக்கத்து வீட்டினரின் கழிப்பறை அல்லது திறந்தவெளியைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இந்த நிலையில், மற்ற குடும்பங்களுக்கு பொதுக்கழிப்பிடம் கட்ட திட்டமிடப்பட்டு, அவர்கள் வசிக்கும் பகுதியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடுகாட்டுக்கு மத்தியில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. அதானி குழுமத்தில் எல்ஐசி முதலீட்டு மதிப்பு ரூ.50,000 கோடி சரிவு
இது குறித்து அந்த கிராம மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதுவும் அந்த கழிப்பறை பூட்டி, கிராமத்தில் உள்ள தனிநபரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும், கழிப்பறையை பயன்படுத்த வேண்டும் என்றால் அவரிடம் சாவியை வாங்கி வந்து ஒரு கிலோ மீட்டர் சென்று பயன்படுத்த வேண்டிய நிலை இருப்பதாகவும், இரவு நேரத்தில் பெண்களும் சிறுமிகளும் இடுகாட்டுப் பகுதிக்குச் செல்ல அச்சம் அடைந்து கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும் கிராம மக்கள் கூறுகிறார்கள்.
இது குறித்து மக்கள் கேட்பது என்னவென்றால், அந்த பொதுக்கழிப்பறை மக்கள் பயன்பாட்டுக்கா? அல்லது சடலங்களின் பயன்பாட்டுக்கா? பிறகு ஏன் இடுகாட்டில் கட்டப்பட்டிருக்கிறது என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
இது குறித்து ஆராய்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆற்காட்டில் வாக்களித்த வேட்பாளா்கள்

காஞ்சிபுரத்தில் வாக்களித்த வேட்பாளா்கள்

மீன ராசிக்கு பணவரவு: தினப்பலன்கள்!

இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

