சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஆடி கிருத்திகை: திருத்தணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தனி முருகன் கோயிலுக்கு ஆக7-10 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கபடவிருக்கின்றன.  

News image
கோப்புப் படம்
Updated On :6 பிப்ரவரி 2024, 1:05 pm

DIN

ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தனி முருகன் கோயிலுக்கு ஆக7-10 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கபடவிருக்கின்றன. 

திருவள்ளூா் மாவட்டம், திருத்தணியில் முருகப் பெருமானின் ஐந்தாம் படை வீடாக திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா வரும் 9-ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்கி நடைபெற உள்ளது.

இதையொட்டி, திருவள்ளூா் மாவட்டத்துக்கு ஆக.9-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தனி முருகன் கோயிலுக்கு ஆக7-10 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கபடவிருக்கின்றன. அதன்படி காஞ்சிபுரம், சென்னை, அரக்கோணம், திருப்பதியில் இருந்து 300 சிறப்பு பேருந்துகள் திருத்தணிக்கு இயக்கப்பட உள்ளன. 

அரக்கோணத்திலிருந்து 25, திருப்பதியில் இருந்து 75 சிறப்பு பேருந்துகள் திருத்தணிக்கு இயக்கப்பட உள்ளன. மேலும் சென்னை, காஞ்சிபுரத்தில் இருந்து திருத்தணிக்கு தலா 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.