தீபாவளி: 5.63 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் வெளியூர் பயணம்
தீபாவளியையொட்டி சென்னையிலிருந்து 3 நாள்களில் 10,325 அரசுப் பேருந்துகளில் 5,63,541 பயணிகள் வெளியூர் சென்றுள்ளனர்.


தீபாவளியையொட்டி சென்னையிலிருந்து 3 நாள்களில் 10,325 அரசுப் பேருந்துகளில் 5,63,541 பயணிகள் வெளியூர் சென்றுள்ளனர்.
தீபாவளி பண்டிகை இன்று தமிழகம் உள்பட நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊா்களில் வசிப்பவா்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட அவா்களது சொந்த ஊா்களுக்குச் செல்வது வழக்கம்.
இதையும் படிக்க- கேரள ஆளுநர் உத்தரவு: உயர்நீதிமன்றத்தில் துணைவேந்தர்கள் முறையீடு
தீபாவளிக்கு முந்தைய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள்கள் என்பதால், சொந்த ஊா்களுக்கு அதிக எண்ணிக்கையில் பயணிகள் சென்றனர். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்த நிலையில் தீபாவளியையொட்டி சென்னையிலிருந்து 3 நாள்களில் 10,325 அரசுப் பேருந்துகளில் 5,63,541 பயணிகள் வெளியூர் சென்றதாக போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. அதேசமயம் இதுவரை 1,85,052 பயணிகள் அரசுப் பேருந்துகளில் வெளிர் செல்ல முன்பதிவு செய்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...