நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

தமிழகத்தில் 35 துணிக் கடைகளில் வருமான வரித்துறை சோதனை

தமிழகம் முழுவதும் 35 துணிக் கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

News image
வருமான வரித்துறை
Updated On :1 பிப்ரவரி 2024, 10:43 am

DIN

தமிழகம் முழுவதும் 35 துணிக் கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையின்போது ஆடை விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு போலி பில் கொடுத்து வருமான வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது.

இந்நிலையில், கடலூர், விழுப்புரம், கரூர், குளித்தலை, திருப்பூர், நாமக்கல், நெய்வேலி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 35-க்கும் மேற்பட்ட துணிக்கடைகளில் இன்று காலைமுதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூர் ஜவஹர் பஜாரில் செயல்படும் துணிக் கடைக்கு காலை 9 மணிக்குள் சென்ற வருமான வரித்துறையினர் கடைக்குள் இருந்த வாடிக்கையாளர்களை வெளியேற்றிவிட்டு சோதனையை தொடங்கினர். முசிறியில் உள்ள கடையின் உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகம் ஆகிய இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், கடலூரில் இயங்கி வரக்கூடிய பிரபல துணிக்கடையில் புதன்கிழமை காலை சென்னையில் இருந்து 6 காரில் வந்த 15 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

திருப்பூர் குமரன் சாலையில் உள்ள துணிக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் கொண்ட குழுவினர் காலை 10 முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சோதனை  முடிவில் துணிக் கடைகளில் எந்த அளவிற்கு வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளது எனத் தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.