காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

சிங்கப்பூர் விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டது!

மழை காரணமாக சென்னையில் தரையிறங்க முடியாத சிங்கப்பூர் விமானம் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது. 

News image
கோப்புப்டம்
Updated On :1 பிப்ரவரி 2024, 10:11 am

DIN


மழை காரணமாக சென்னையில் தரையிறங்க முடியாத சிங்கப்பூர் விமானம் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது. 

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை காற்றுடன் மழை பெய்தது. 

இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து 178 பயணிகளுடன் சென்னை வந்த விமானம் தரையிறங்க முடியாத சூழல் நிலவியதை அடுத்து விமானம் பெங்களூருவுக்குத் திருப்பிவிடப்பட்டது. 

இதுபோன்று கொச்சி, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம் நகரங்களில் இருந்து வந்த விமானங்களும் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானிலே வட்டமடித்த நிலையில் தாமதமாகத் தரையிறங்கியது. மேலும், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றது.

இதனால் சென்னை விமான நிலையத்தில் இரண்டாவது நாளாக விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.