மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

கரோனா: பசியில் தவிக்கும் வளர்ப்பு யானைகள்

பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் முடங்கி தற்போது வாழ வழியின்றி தவிக்கும் ஏராளமானோரில் மதுரையைச் சேர்ந்த ரங்கனும் ஒருவர்.

News image

கரோனா: பசியில் தவிக்கும் வளர்ப்பு யானைகள்

Updated On :31 ஜூலை 2020, 11:24 am

மதுரை: பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் முடங்கி தற்போது வாழ வழியின்றி தவிக்கும் ஏராளமானோரில் மதுரையைச் சேர்ந்த ரங்கனும் ஒருவர்.

ஆனால், அரைஜான் வயிறுக்கே வழிதேட முடியாமல் உலகமே தவித்துக் கொண்டிருக்கும் போது, தான் வளர்த்து வரும் இரண்டு யானைகளுக்கு உணவு வழங்க வழியில்லாமல் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ரங்கன்.

Story image

மதுரையைச் சேர்ந்த ரங்கன் இரண்டு யானைகளை வளர்த்து வருகிறார். கோயில் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சி போன்றவற்றுக்கு யானைகளை அழைத்துச் சென்று வருவாய் ஈட்டி வந்த ரங்கனுக்கு பொதுமுடக்கத்தால் வருமானத்துக்கு வழியில்லாமல் போனது. இதனால், யானைகளுக்கு உணவளிக்க பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வருகிறார் ரங்கன்.

நாங்கள் நான்கு தலைமுறைகளாக வீட்டில் யானைகளை வளர்த்து வருகிறோம், கோயில் திருவிழா, திருமண நிகழ்ச்சி, அரசு நிகழ்ச்சிகளுக்கு யானைகளை அழைத்துச் சென்று வருவாய் ஈட்டிவந்தோம். அந்த வருவாய், யானைகளுக்கு உணவளிக்கப் போதுமானதாக இருந்தது. ஆனால் பொது முடக்கம் காரணமாக வருமானம் இல்லை. எப்படியோ கடந்த நான்கு மாதங்களாக யானைகளுக்கு உணவளித்து வருகிறோம்.

Story image

எனவே, இரண்டு யானைகளுக்கும் உணவு வழங்க மாநில அரசு உதவி செய்ய வேண்டும். கேரள மாநில அரசு உதவி வருவதைப் போல இரண்டு யானைகளுக்கும் உணவு பொருள்களை வழங்கி உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.