2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

எடப்பாடியில் புதிய நகராட்சி அலுவலக கட்டடம்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்துவைத்தார்

எடப்பாடி பகுதியில் ரூ.5கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட, புதிய நகராட்சி அலுவலக கட்டடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளி அன்று திறந்துவைத்தார். 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:57 pm

DIN

எடப்பாடி பகுதியில் ரூ.5கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட, புதிய நகராட்சி அலுவலக கட்டடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளி அன்று திறந்துவைத்தார். 

எடப்பாடி நகராட்சி தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அண்மையில் எடப்பாடி நகராட்சியின் பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டது. இந்நிலையில் எடப்பாடி - ஜலகண்டாபுரம் சாலையில் செயல்பட்டு வந்த நகராட்சி அலுவலகத்திற்கு, புதிய கட்டம்  கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கி அனுமதி அளித்தது. இதனை அடுத்த எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட வெள்ளாண்டிவலசு பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய நகராட்சி அலுவலகம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. கட்டப்பணிகள் முழு அளவில் நிறைவுற்ற நிலையில், எடப்பாடி பகுதியில் வெள்ளி அன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி , புதிய நகராட்சி அலுவலக கட்டத்தினை திறந்துவைத்தார்.

மேலும்  கொங்கணாபுரம் ஒன்றித்திற்கு உட்பட்ட வெள்ளாபுரம் ஊராட்சிப் பகுதியில் சரபங்கா ஆற்றின் குறுக்கே ரூ.2 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தினை மக்கள் பயன்பாட்டிற்க்காக திறந்துவைத்தார். மேலும் எடப்பாடியை அடுத்துள்ள ஜலகண்டாபுரம், வனவாசி , நங்கவள்ளி, வீரகல்புதூர் மற்றும் மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 698 கிராம குடியிருப்புகளுக்கு, சுத்திகரிக்கப்பட்ட காவிரிக்குடிநீர் வழங்கும் விதமான ரூ.17 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டிலான புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகளுக்கு அடிக்கள் நாட்டினார். 

மேலும் எடப்பாடி சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு, தமிழக  பள்ளிக்கல்வித்துறை சார்பில் 11கோடியே 54 லட்சம்மதிப்பீட்டிலான கூடுதல் வகுப்பறைகள், சுற்றுசுவர்கள், சுகாதார வளாகங்கள், அறிவியல் ஆய்வகங்கள்  உள்ளிட்ட கட்டப்பணிகளுக்கும், எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட, இருப்பாளி ஊராட்சி அலுவலகத்திற்கு புதிய அலுவலகம் கட்டுவதற்க்கான கட்டடப்பணிகள் உள்ளிட்ட திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவைக்கு வைத்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விரைவில் ஜலகண்டாபுரம் பகுதியில் புறவழிச்சாலை அமைப்பதற்க்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என கூறினார். 

சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தலைமையில் நடைபெற்ற அரசு விழா நிகழ்வில், செம்மலை, ராஜா, வெங்கடாசலம் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சேலம் மண்டல நிர்வாக செயற்பொறியாளர் என்.கமலநாதன், மண்டல நிர்வாக இயக்குநர் பி.அசோக்குமார், நகராட்சி ஆணையாளர் கே.சென்னுகிருஷ்ணன்,  நகராட்சி பொறியாளர் ஆர்.முருகன் மற்றும் முன்னாள் சேர்மன்.டி.கதிரேசன். ஏ.எம்.முருகன் உள்ளிடோர் கலந்துகொண்டனர். சமூக இடைவெளி பின்பற்றி திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.