அதிகாலை வேளைகளில் சாலைகளில் நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, சைக்கிள் பயிற்சி போன்றவற்றில் அதிகமானோர் ஈடுபட்டதை காணமுடிந்தது. பள்ளி மாணவர் குடியிருப்பு பகுதியில் இருப்போர் ஒன்றுகூடி 10 கிலோ மீட்டர் முதல் 30 கிலோமீட்டர் வரை நாளொன்றுக்கு நடைப்பயிற்சி, ஓட்டப் பயிற்சி, சைக்கிள் பயிற்சி போன்றவற்றில் தங்களது கவனத்தை திருப்பியுள்ளது காணமுடிந்தது. உடல் நலனுக்கு ஏற்ற இந்த பயிற்சியை இளைஞர்களும் மாணவர்களும் மேற்கொண்டுள்ளது பெற்றோர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக சைக்கிள் வாங்கும் ஆர்வம் இளைஞர்களிடம் அதிகரித்துள்ளது.