ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

குன்னூர் ஜிம்கானா கிளப் பகுதியில் திடீரென புகுந்த காட்டெருமைக் கூட்டம்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் ராணுவ அதிகாரிகள் பயன்படுத்தும் ஜிம்கானா கிளப் வளாகத்தில் காட்டெருமைக்  கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை திடீரெனப் புகுந்தது. இதனால் அப்பகுதி தொழிலாளரகள்  அச்சமடைந்தனர்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:33 pm

ஜான்சன் சி. குமார்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் ராணுவ அதிகாரிகள் பயன்படுத்தும் ஜிம்கானா கிளப் வளாகத்தில் காட்டெருமைக்  கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை திடீரெனப் புகுந்தது. இதனால் அப்பகுதி தொழிலாளரகள்  அச்சமடைந்தனர்.

குன்னூர் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்ற வனவிலங்குகள் அவ்வப்போது உணவு தேடி குடியிருப்புப் பகுதிகளில் வலம் வருவது வாடிக்கையாகி வருகிறது.

Story image

இந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் பயன்படுத்தும் ஜிம்கானா கிளப் பகுதியில் காட்டெருமைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை திடீரென நுழைந்ததால் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.

Story image

மேலும் ஆபத்தை உணராமல் சிலர் காட்டெருமையின் அருகே சென்று செல்பி எடுத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு காட்டெருமையால் தாக்கப்பட்டு  சிம்ஸ் பூங்கா அருகே சுற்றுலாப் பயணி மற்றும் நடைப்பயிற்சி சென்றவர் என இருவர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Story image

எனவே, வனத்துறையினர் வனவிலங்கு அருகே சென்று செல்பி எடுப்போர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.