பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பினையொட்டி, இரு நாட்டுத் தலைவர்களும் நேற்று சென்னைக்கு வருகை தந்தனர். முதலில் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து பிற்பகல் 1.30 மணிக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் என சீன அதிபருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தமிழக பாரம்பரிய முறைப்படி அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.