குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

திமுக தேர்தல் அறிக்கையில் ஒரு கோடி வேலை வாய்ப்பு? புருவங்களை உயர்த்த வைக்கும் புள்ளி விவரம்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், 10வது படித்த ஒரு கோடி பேருக்கு சாலைப் பணியாளர்கள் வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது அனைவரின் புருவங்களையும் உயர்த்தியுள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:26 am

ENS


மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், 10வது படித்த ஒரு கோடி பேருக்கு சாலைப் பணியாளர்கள் வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது அனைவரின் புருவங்களையும் உயர்த்தியுள்ளது.

ஏன்? ஒரு கோடி பேருக்கு வேலை கொடுக்க முடியாதா? முடியாததையா முடியும் என்று ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்? என்று கேட்டால் நிச்சயம் அதற்கு பதில் எங்களிடம் இல்லை.

நீங்களே வாருங்கள் புள்ளி விவரம் சொல்வதைக் கேளுங்கள்.

தமிழகத்தில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் 1 கோடி சாலைப் பணியாளர்களை பணியமர்த்த முடியாமல் போனால் கூடப்பரவாயில்லை. இந்தியா முழுவதுமே தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகபட்சம் 5 லட்சம் பேர் மட்டுமே பணியமர்த்த முடியுமாம் சொல்கிறது புள்ளி விவரம்.

அதாவது கடந்த நவம்பர் 30ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் 1.13 லட்சம் கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. தற்போது 5.5 முதல் 7 கி.மீ. தூர சாலைக்கு ஒரு சாலைப் பணியாளர் வீதம் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

அப்படியானால், திமுக சொன்னபடி இந்த 1.31 லட்சம் கி.மீ. தூரத்துக்குள் ஒரு கோடிப் பேரை நியமிப்பது எப்படி, ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு 76 பேரை நியமித்தால் மட்டுமே இது சாத்தியப்படும்.

ஒரு வேளை ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு 76 சாலைப் பணியாளர்களை நியமித்து பராமரித்தால் இந்தியா விரைவில் வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு இணையான சாலை வசதிகளைக் கொண்டதாக மாறிவிடுமோ.. சற்று பயமாகத்தான் இருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.