மத்திய அரசின் நிதி உதவி திட்டத்துக்கு "பதிவு செய்யப்பட்ட குத்தகை நிலங்கள்' என்ற விதிமுறையை நிர்ணயித்தால் எந்த விவசாயியும் பயன்பெற முடியாது. விவசாயத்தை பொருத்தவரை, அது சொந்த நிலமாக இருந்தாலும், குத்தகை நிலமாக இருந்தாலும் நிலத்தை தயார்படுத்துதல், விதைத்தல், களையெடுத்தல், இடுபொருள்கள் என அனைத்துப் பணிகளும் ஒரே மாதிரியாக செய்ய வேண்டும். குத்தகை விவசாயிகளும் பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். அதனை கருத்தில்கொண்டு, கூட்டுப் பட்டாவில் தனித் தனியாக விவசாயம் செய்வோருக்கும் கிராம நிர்வாக அலுவலர்களின் பரிந்துரையின்படி நிதி உதவி வழங்கலாம் என்ற அறிவிப்பினை, குத்தகை விவசாயிகளுக்கும் பொருந்தும் வகையில் அரசு மாற்றம் கொண்டு வர வேண்டும். சிறு - குறு விவசாயிக்களுக்கான நிதி உதவி பெறுவதற்கு மட்டும் என்ற அடிப்படையிலாவது கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் சான்றளிக்க வேண்டும் என்றார்.