சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

வெறும் ரூ.250 செலவில் மழை நீர் சேகரிப்பு மையம்: சென்னைவாசியின் சூப்பர் ஐடியா

அத்தியாவசியத் தேவைக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லை, இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழை நீரோ சாலையில் ஆறாக ஓடியது. இதனைப் பார்த்த சென்னைவாசிகள் பலருக்கும் மனது லேசாகக் கனத்திருக்கும்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:22 am

ENS


அத்தியாவசியத் தேவைக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லை, இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழை நீரோ சாலையில் ஆறாக ஓடியது. இதனைப் பார்த்த சென்னைவாசிகள் பலருக்கும் மனது லேசாகக் கனத்திருக்கும்.

ஆனால் என்ன செய்ய? சொந்த வீடா இருக்கு, மழை நீர் சேகரிப்பு  அமைப்பை ஏற்படுத்த என்று வாடகை வீட்டில் இருப்பவர்களும், இப்போதிருக்கும் செலவில் அதை வேறுச் செய்வார்களா என்று சொந்த வீட்டுக்காரர்களும் புலம்பிக் கொண்டே இருந்தால், பெய்யும் மழை நீரை என்னதான் செய்வது, நமது கண்ணீரோடு கலந்து வழியனுப்பி விடுவதுதானா?

தமிழகத்துக்கு தென் மேற்குப் பருவ மழை பெரிய அளவில் கை கொடுக்காது என்பது நன்கு தெரியும். ஆனால், இந்த காலக்கட்டத்தில் பெய்யும் சொற்ப மழை நீரையும் ஓரளவுக்கு சேகரித்து வைக்கும் வழியை சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த தயானந்த் கிருஷ்ணன்(45) என்பவர் கண்டறிந்துள்ளார். இதற்கு அவர் செய்த செலவு வெறும் ரூ.250.

இரண்டு பிவிசி வளைவு குழாய்களையும், 3 அடி பிவிசி குழாய் ஒன்றும், வெள்ளை துணியும் வாங்கிவிட்டார். தனது மொட்டை மாடியில் இருந்து மழை நீர் வெளியேற்றும் குழாயுடன் பிவிசி வளைவு குழாய், பிறகு நீண்ட பிவிசி குழாயை இணைத்து ஒரு அமைப்பை உருவாக்கினார்.

வாங்கிய துணியை குழாயின் இறுதியில் வட்டிகட்டி போல அமைத்து, அதன் அருகே 225 லிட்டர் பிடிக்கும் டிரம்மை வைத்தார். இதன் மூலம் மழை பெய்யும் போது 10 நிமிடத்தில் 225 லிட்டர் தண்ணீரை இவர் சேகரிக்கு முடியும். இப்படி சேகரித்த மழை நீரைக் கொண்டு அவர் குடும்பத்தினர் பாத்திரங்களை சுத்தம் செய்கிறார்களாம். வீட்டைத் துடைக்கவும் பயன்படுத்துகிறார்களாம்.

முதலில் பெய்த மழை நீரை பூமிக்குள் அனுப்பிவிட்டேன். பிறகு வந்த சுத்தமான தண்ணீரை வீட்டுப் பயன்பாட்டுக்குப் பிடித்துக் கொண்டேன் என்கிறார் மகிழ்ச்சியாக. 

பெரிய அளவிலும் சரி, சின்னச் சின்ன அளவிலும் சரி, மழை நீரை சேமிக்க மக்கள் முயற்சிக்க வேண்டும் என்பதற்கு இவர் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

இதுபோன்று செய்து வைத்துக் கொள்வதால், மழைக்காலங்களில் மின் துண்டிப்பு ஏற்படும் போதும் தண்ணீருக்காக அலைய வேண்டியதிருக்காது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.