சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

மன்மோகன் சிங் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குப் போட்டியிட வாய்ப்பில்லை!

திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குப் போட்டியிட மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:22 am

ENS


சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குப் போட்டியிட மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அசாம் மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அவரது 6 ஆண்டு பதவிக்காலம் ஜூன் 14-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. 

இந்த நிலையில், அம்மாநிலத்தில் இருந்து இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஆனால், அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருப்பதால் மன்மோகன் சிங்கை மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்வதற்கான போதிய பலம் காங்கிரஸ் கட்சியிடம் இல்லை.   

இந்த நிலையில் அவர் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குப் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பாஜகவைச் சேர்ந்த ராஜஸ்தான் மாநிலங்களவை உறுப்பினர் சமீபத்தில் மரணம் அடைந்ததால், ராஜஸ்தானில் இருந்து மன்மோகன் சிங் போட்டியிடுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்கு போதுமான எம்எல்ஏக்களின் பலம் இருப்பதால், திமுகவின் உதவியோடு, தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடும் தேவை ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இரண்டு பேர் மாநிலங்களவைப் பதவியைப் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மதிமுக பொதுச் செயலர் வைகோவுக்கு ஒரு மாநிலங்களவைப் பதவி உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், மற்றொரு பதவி திமுக தொழிற்சங்க பொதுச் செயலர் பி. சண்முகத்துக்குக் கிடைக்கும் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவிக் காலம் ஜூலை 24ம் தேதியோடு முடிவுக்கு வரவிருப்பதால், திமுக சார்பில் மாநிலங்களவைக்கு யார் நிறுத்தப்படுவார்கள் என்பது விரைவில் தெரிய வரும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.