புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, சிவகங்கையில் வைகை ஆறு, விருதுநகரில் குண்டாறில் வாய்க்காலை இணைப்பதுதான் திட்டம். தொடக்கத்தில் வெறும் ரூ. 125 கோடியில் தொடங்கி, பிறகு ரூ. 555 கோடியாகி, அதன்பிறகு ரூ. 1,500 கோடியாகி, தற்போது ரூ. 7 ஆயிரம் கோடியில் வந்து நிற்கிறது. கொள்கை அளவில் திட்டத்தை ஏற்றுக் கொண்டதாகவும் மொத்தமாக இத்தனைப் பெரிய தொகையை மாநில அரசு மட்டுமே ஒதுக்க முடியாது என்றும், மத்திய அரசு நிதி பெறுவதற்கு முயற்சிக்கிறோம் என்றும் முடிவு செய்திருக்கிறது தமிழக அரசு. இப்போதும் ஒரே நேரத்தில் ரூ. 7 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டியதில்லை. 5 ஆண்டுத் திட்டமாக படிப்படியாக நிதியை ஒதுக்கி, திட்டத்தை நிறைவேற்றினால் 5 மாவட்டங்கள் பயன்பெறும் என்கிறார் தனபதி.