எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

கர்நாடகாவில் இருந்து வறட்சியின் கோரப் பிடியில் சிக்கியிருக்கும் சென்னை வரை: காவிரியின் புதிய பயணம்

வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் சென்னை, எந்த ஆண்டும் இல்லாத வகையில் பெற்ற தாயை இழந்தது போல நிலத்தடி நீரை இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கிறது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:40 am

ENS


வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் சென்னை, எந்த ஆண்டும் இல்லாத வகையில் பெற்ற தாயை இழந்தது போல நிலத்தடி நீரை இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கிறது.

சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கர்நாடகா - தமிழ்நாடு எல்லைப் பகுதியான அஜ்ஜிப்பாறையின் ஸீரோ பாயிண்டில் இருந்து காவிரி நீர் சென்னையில் உள்ள அடிதட்டு மக்களின் வீடு வரை கொண்டு வந்த புதிய பாதையை விளக்கும் புகைப்படங்களின் தொகுப்பு இது.

Story image

காவிரி நீர் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில்கள் மூலம் சென்னைக்குக் கொண்டு வந்து விநியோகிக்கும் திட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் நிறைவேற்றியது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

Story image

கிருஷ்ணகிரி மாவட்டம் அஜ்ஜிப்பாறை ஸீரோ பாயிண்டில் காவிரி ஆற்றின் பயணம் தொடங்குகிறது. உரிகாம் வனப்பகுதிக்குள் நுழைந்து, இங்குதான் காவிரி நீர் தமிழகத்தின் எல்லையைத் தொட்டு முத்தமிடுகிறது.

Story image

அஜ்ஜிப்பாறை வனப்பகுதிக்குள் காவிரி ஆற்றை புகைப்படம் எடுக்கச் சென்ற போது தரையில் பதிந்திருந்த சிறுத்தையின் கால் தடம்.

Story image

இதுவரை மேடுபள்ளங்களை எல்லாம் கடந்து ஆறாக வந்து கொண்டிருந்த காவிரி, ஒகேனக்கல் பகுதியில் அருவியாகக் கொட்டி தமிழகத்தை அடைந்துவிட்டதை குதித்து குதூகலிப்பது போல காட்சி தருகிறது.

Story image

இது நிச்சயம் என்னவென்று தெரிந்திருக்கும். ஆம், மேட்டூர் அணைக்குள் அமைந்திருக்கும் புகழ்பெற்ற நந்தி சிலைதான். ஜலகண்டேஸ்வரர் கோயிலின் நந்தி சிலை, மேட்டூர் அணையில் தண்ணீர் நிரம்பிவிட்டால் முழுவதுமாக தண்ணீருக்குள் மூழ்கிவிடும். தற்போது கம்பீரமாக மேட்டூர் அணையின் பரப்புகளை பார்த்துக் கொண்டிருக்கிறது இந்த நந்தி.

Story image

பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட தேவாலயத்தின் புகைப்படம். இதுவும் மேட்டூர் அணைக்குள் அமைந்திருக்கிறது. தற்போது மேட்டூர் அணை வறண்டு காணப்படும் காட்சி இது.

Story image

மேட்டூர் அணைக்கு அருகே இருக்கும் செக்கனூர் கதவணையில் சேமிக்கப்படும் காவிரி நீர். இங்கிருந்துதான் குழாய்கள் மூலம் காவிரி நீர் பம்ப் செய்யப்பட்டு வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்குக் கொண்டு வரப்படுகிறது.

Story image

ஜோலார்பேட்டையில் தரைமட்டக் குழாயில் இருந்து ரயில்  வேகான்களில் காவிரி நீர் ஏற்றப்படுகிறது.

Story image

ஜோலார்பேட்டையில் இருந்து குடிநீரை சுமந்து கொண்டு சென்னை மக்களின் தாகம் தீர்க்க வில்லிவாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடையும் தண்ணீர் ரயில்.

Story image

கீழ்ப்பாக்கம் மெட்ரோ குடிநீர் ஆலையில் காவிரி நீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.

Story image

சுத்திகரிக்கப்பட்ட காவிரி நீர், மெட்ரோ குடிநீர் வாரியத்தின் லாரிகள் மூலம் சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் விநியோகிக்கப்படுகிறது.

Story image

இவ்வாறு, குடகில் தோன்றும் காவிரி நீரானது, புதிய பாதையில் பயணித்து சென்னை மக்களின் குடங்களில் நிரம்புகிறது.

Photo - Shiba Prasad Sahu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.