ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கர்நாடகாவில் இருந்து வறட்சியின் கோரப் பிடியில் சிக்கியிருக்கும் சென்னை வரை: காவிரியின் புதிய பயணம்

வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் சென்னை, எந்த ஆண்டும் இல்லாத வகையில் பெற்ற தாயை இழந்தது போல நிலத்தடி நீரை இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கிறது.

News image
Updated On :30 ஜூலை 2019, 5:47 am


வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் சென்னை, எந்த ஆண்டும் இல்லாத வகையில் பெற்ற தாயை இழந்தது போல நிலத்தடி நீரை இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கிறது.

சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கர்நாடகா - தமிழ்நாடு எல்லைப் பகுதியான அஜ்ஜிப்பாறையின் ஸீரோ பாயிண்டில் இருந்து காவிரி நீர் சென்னையில் உள்ள அடிதட்டு மக்களின் வீடு வரை கொண்டு வந்த புதிய பாதையை விளக்கும் புகைப்படங்களின் தொகுப்பு இது.

Story image

காவிரி நீர் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில்கள் மூலம் சென்னைக்குக் கொண்டு வந்து விநியோகிக்கும் திட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் நிறைவேற்றியது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

Story image

கிருஷ்ணகிரி மாவட்டம் அஜ்ஜிப்பாறை ஸீரோ பாயிண்டில் காவிரி ஆற்றின் பயணம் தொடங்குகிறது. உரிகாம் வனப்பகுதிக்குள் நுழைந்து, இங்குதான் காவிரி நீர் தமிழகத்தின் எல்லையைத் தொட்டு முத்தமிடுகிறது.

Story image

அஜ்ஜிப்பாறை வனப்பகுதிக்குள் காவிரி ஆற்றை புகைப்படம் எடுக்கச் சென்ற போது தரையில் பதிந்திருந்த சிறுத்தையின் கால் தடம்.

Story image

இதுவரை மேடுபள்ளங்களை எல்லாம் கடந்து ஆறாக வந்து கொண்டிருந்த காவிரி, ஒகேனக்கல் பகுதியில் அருவியாகக் கொட்டி தமிழகத்தை அடைந்துவிட்டதை குதித்து குதூகலிப்பது போல காட்சி தருகிறது.

Story image

இது நிச்சயம் என்னவென்று தெரிந்திருக்கும். ஆம், மேட்டூர் அணைக்குள் அமைந்திருக்கும் புகழ்பெற்ற நந்தி சிலைதான். ஜலகண்டேஸ்வரர் கோயிலின் நந்தி சிலை, மேட்டூர் அணையில் தண்ணீர் நிரம்பிவிட்டால் முழுவதுமாக தண்ணீருக்குள் மூழ்கிவிடும். தற்போது கம்பீரமாக மேட்டூர் அணையின் பரப்புகளை பார்த்துக் கொண்டிருக்கிறது இந்த நந்தி.

Story image

பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட தேவாலயத்தின் புகைப்படம். இதுவும் மேட்டூர் அணைக்குள் அமைந்திருக்கிறது. தற்போது மேட்டூர் அணை வறண்டு காணப்படும் காட்சி இது.

Story image

மேட்டூர் அணைக்கு அருகே இருக்கும் செக்கனூர் கதவணையில் சேமிக்கப்படும் காவிரி நீர். இங்கிருந்துதான் குழாய்கள் மூலம் காவிரி நீர் பம்ப் செய்யப்பட்டு வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்குக் கொண்டு வரப்படுகிறது.

Story image

ஜோலார்பேட்டையில் தரைமட்டக் குழாயில் இருந்து ரயில்  வேகான்களில் காவிரி நீர் ஏற்றப்படுகிறது.

Story image

ஜோலார்பேட்டையில் இருந்து குடிநீரை சுமந்து கொண்டு சென்னை மக்களின் தாகம் தீர்க்க வில்லிவாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடையும் தண்ணீர் ரயில்.

Story image

கீழ்ப்பாக்கம் மெட்ரோ குடிநீர் ஆலையில் காவிரி நீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.

Story image

சுத்திகரிக்கப்பட்ட காவிரி நீர், மெட்ரோ குடிநீர் வாரியத்தின் லாரிகள் மூலம் சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் விநியோகிக்கப்படுகிறது.

Story image

இவ்வாறு, குடகில் தோன்றும் காவிரி நீரானது, புதிய பாதையில் பயணித்து சென்னை மக்களின் குடங்களில் நிரம்புகிறது.

Photo - Shiba Prasad Sahu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.