சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

சென்னைக்கு ரயிலில் வரும் குடிநீர்: ஒரு நடைக்கு ரூ.8.6 லட்சம் பில் போடும் ரயில்வே

சென்னையில் நிலவும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

News image
Updated On :9 ஜூலை 2019, 6:14 am


சென்னை : சென்னையில் நிலவும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து வரும் நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில் ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் சென்னைக்குக் குடிநீர் கொண்டு வரும் பணி தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வர ரயில்வேக்கு தமிழக அரசு எவ்வளவு பணம் கொடுக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? 

வாருங்கள் தெரிந்து கொள்வோம். 
அதாவது, 55,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 50 பெட்டிகள் மூலம் சென்னைக்கு 2.5 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டுவரப்பட உள்ளது. இதற்காக ஒரு நடைக்கு ரயில்வேக்கு தமிழக அரசு செலுத்த வேண்டிய கட்டணம் ரூ.8.6 லட்சம். அப்படியானால் ஒரு லிட்டர் நீருக்கு 34 பைசா செலவிட்டு தமிழக அரசு தண்ணீர் கொண்டு வருகிறது.

ஜோலார்பேட்டை  - வில்லிவாக்கம் வரையிலான 204 கி.மீ. பயண நேரம் சுமார்  5 - 7  மணி நேரம். ஒரு நாளைக்கு 3 முறை இவ்வாறு தண்ணீர் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அதன் மூலம் ஒட்டுமொத்தமாக 7.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு வரும். இதில் 10 முதல் 15 சதவீத தண்ணீர் சிந்திவிடும் அபாயமும் உள்ளது.

இப்படி ஒரு நடைக்கு ரூ.8.6 லட்சம் என்றால், 30 நாட்களுக்கு ரயில்வேக்கு தமிழக அரசு ரூ.7.74 கோடியை கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஆனால், இதைவிட, கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு லிட்டர் குடிநீருக்கு ரூ.150 செலவாகிறது என்று சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகிறார்கள்.

சென்னையில் ஏற்பட்டுள்ள கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதற்காக தமிழக அரசு சார்பில் ரூ. 65 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இதையொட்டி, கடந்த வாரத்தில் முதற்கட்டமாக சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகள், ரயில்வே அதிகாரிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஜோலார்பேட்டை மேட்டுச்சக்கரம், கேதாண்டப்பட்டி, பார்சம்பேட்டை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

மேட்டுச்சக்கரகுப்பம் பகுதியில் உள்ள ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து பார்சம்பேட்டை ரயில்வே கேட் அருகே வரை 3.5 கி.மீ. தொலைவுக்கு ராட்சத குழாய் அமைக்கப்பட்டு, அதிலிருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இந்நிலையில், மேட்டுச்சக்கரக்குப்பத்தில் இருந்து பார்சம்பேட்டை ரயில்வே கேட் வரை குடிநீர்க் குழாய் அமைக்க அப்பகுதியை பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைக்கும் பணி கடந்த வாரம் தொடங்கியது. இப்பணிகள் முடிந்து புதன் அல்லது வியாழக்கிழமையில் சென்னைக்கு ரயிலில் குடிநீர் கொண்டு வரும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.