திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

தூத்துக்குடியில் புதுமண காதல் தம்பதி வெட்டிப் படுகொலை: பெண்ணின் தந்தை கைது

பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட புதுமண காதல் தம்பதி பயங்கர ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:26 am

ENS


தூத்துக்குடி: பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட புதுமண காதல் தம்பதி பயங்கர ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

தூத்துக்குடியில் நடந்த இந்த சம்பவத்தில், படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

சோலைராஜ் (23), பேச்சியம்மாள் என்கிற ஜோதி (20) இருவரும் நேற்று இரவு வீட்டுக்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்த போது ஒரு கும்பல் அவர்களை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடியது.

பெற்றோரின் எதிர்ப்பை மீறி இவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் 15ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டு பெரியார் காலனியில் தனியாக வாழ்ந்து வந்த நிலையில் இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.

கிடைத்திருக்கும் தகவலின் அடிப்படையில், சோலைராஜ் பறையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர், ஜோதி பள்ளர் சமுதாயப் பெண். இரண்டு ஜாதியும் எஸ்.சி. பிரிவில் வந்தாலும், மக்களின் மனப்பான்மையில் பறையரை விட பள்ளர் சற்று உயர்ந்த ஜாதியாகக் கருதப்படுகிறார்கள். இந்த நிலையில்தான், பறையர் ஜாதியைச் சேர்ந்த சோலைராஜை, பள்ளர் இனப் பெண் ஜோதி திருமணம் செய்து கொண்டதால், பெண்ணின் தந்தையே ஆணவப் படுகொலை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தம்பதியின் உடல்கள் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.