பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தெலங்கானா விரைவு ரயிலில் பயங்கர தீ விபத்து: யாருக்கும் பாதிப்பில்லை!

ஹைதராபாத்தில் இருந்து புது தில்லி செல்லும் தெலங்கானா விரைவு ரயிலில் இன்று பயங்கர தீ விபத்து நேரிட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2019, 5:54 am


புது தில்லி: ஹைதராபாத்தில் இருந்து புது தில்லி செல்லும் தெலங்கானா விரைவு ரயிலில் இன்று பயங்கர தீ விபத்து நேரிட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

இன்று காலை 7.43 மணியளவில் வண்டி எண் 12723, ஹரியாணா மாநிலம் அசோட்டி ரயில் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த போது திடீரென ரயிலில் தீப்பற்றியது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்தனர். 

அசோட்டி ரயில் நிலையத்தைக் கடந்து சென்ற சில நொடிகளில் இந்த விபத்து நேரிட்டது. இதனால் அசோட்டி - பல்லப்கார் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் நிறுத்தப்பட்டது. 

தீ காரணமாக பயங்கர புகை எழுந்து தண்டவாளப் பகுதிகளை சூழ்ந்து கொண்டதால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. 

ரயிலின் 9வது பெட்டியில் இருந்த சக்கரத்தின் பிரேக் பகுதியில் தீப்பிடித்திருக்கலாம் என்று முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
 

Photo : ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.