சென்னை: சாலையில் இருக்கும் சிவப்பு விளக்கை மதிக்காமல் நாம் சாலையைக் கடந்து சென்றால் என்னவாகிவிடப் போகிறது என்று ஒருவர் நினைத்தால் அது இனி தவறாகிப் போய்விடும்.
ஒவ்வொரு வாகன ஓட்டிக்கும் என ஒரு குற்ற வரலாற்றுப் பதிவு (History Sheet) உருவாக்கப்பட்டு, அதில் சின்ன சின்ன சாலை விதி மீறல்களும் பதிவு செய்ய தமிழ்நாடு போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.
ஒரு வாகன ஓட்டி செய்யும் அனைத்து சாலை விதி மீறல்களும் அந்த ஸ்மார்ட் கார்டில் பதிவு செய்யப்படும்.
பொதுப் போக்குவரத்தில் ஒரே தேசம், ஒரே அட்டை திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. போக்குவரத்துத் துறை முழுவதும் மின்னணு மயமாக்கப்பட வேண்டும். இதன் ஒரு பகுதியாகவே ஒரே தேசம் ஒரே அட்டை திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாகம் தெரிவித்திருந்தது.
இந்த ஸ்மார்ட் அட்டையில், ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ், வாகனக் காப்பீடு விவரம் என அனைத்தும் பதிவாகும். ஸ்மார்ட்கார்டில் இருக்கும் சிப்பில் இந்த தகவல்கள் பதிவு செய்யப்படும்.
முதற்கட்டமாக புதிதாக ஓட்டுநர் உரிமம் கோருவோருக்கு இந்த ஸ்மார்ட் அட்டைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதே அட்டையில், சாலை விதிகளை மீறியது, அவர்கள் கட்டிய அபராதத் தொகை, அவர்கள் செய்த குற்றத்தின் நிலை போன்றவையும் பதிவேற்றம் செய்து, ஒவ்வொரு வாகன ஓட்டிக்கும் ஒரு தகவல் பதிவு பராமரிக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை ஆணையர் சி. சமயமூர்த்திக் கூறியுள்ளார்.
இன்னும் ஒரு மாத காலத்துக்குள் இந்த ஸ்மார்ட் கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், போக்குவரத்துக் காவலர்களுக்கு கையடக்க கணினி எனப்படும் 'டேப்'கள் வழங்கப்பட்டு, அவற்றின் மூலம் ஸ்மார்ட் கார்டுகளில் உள்ள விவரங்களை படித்து வாகன ஓட்டிகளின் குற்ற வரலாற்றை அறிந்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதில், அதிக ஆட்களை, பொருட்களை ஏற்றிச் செல்லுதல், வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துதல், குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல், சிக்னலை மதிக்காமல் செல்லுதல் போன்ற அனைத்து விதி மீறல்களும் பதிவு செய்யப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

நோய்நாடி நோய்முதல் நாடி...

குடிநீா் கேட்டு உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கனிவான இதயம்... துணிச்சலான சிந்தனை
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


