மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

மெட்ரோ ரயிலில் 5 நாட்களில் 6.41 லட்சம் பேர் இலவச பயணம்

இதில் மொத்தம் 6 லட்சத்து 41 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:10 pm

Raghavendran

சென்னையில் சென்ட்ரல் - நேரு பூங்கா, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., மற்றும் சின்ன மலை இடையே புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் போக்குவரத்து மே 25-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. 

பொதுமக்கள் இப்பாதையில் மெட்ரோ ரயில் இயக்கப்படுவதை அறிந்து கொள்வதற்காக இந்த புதிய வழித்தடங்களில் இலவச பயணத்தை அறிமுகம் செய்தது. மே 29-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரை இந்த இலவச பயணம் தொடர்ந்தது.

இதில் மொத்தம் 6 லட்சத்து 41 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இலவச பயணம் தொடங்கிய மே 25-ஆம் தேதி 50 ஆயிரம் பேர், மே 26-ஆம் தேதி 20 ஆயிரத்து 500 பேர், மே 27-ஆம் தேதி அதிகபட்சமாக 1 லட்சத்து 84 ஆயிரத்து 518 பேர், மே 28-ஆம் தேதி 1 லட்சத்து 12 ஆயிரத்து 520 பேர், கடைசி நாளான மே 29-ஆம் தேதி 1 லட்சத்து 73 ஆயிரத்து 986 பேர் பயணம் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.